628மேருமந்தர புராணம்  


 

வேறு.

 1349. ஆயுவுங் கரணமும் பொறியு மக்கதி
      வாயுவுங் கெடுதலால் மரண மற்றவை
      போயுழிப் பெறுதலாம் பிறவி போமிடத்
      தேயுமொன் றிரண்டுமூன் றாங்க ணங்களே.

     (இ-ள்.)   அக்கதி   -    அந்தந்தக் கதிகளுக்கு ஸ்திதியாகிய,
ஆயுவும் - ஆயுஷ்யமும், கரணமும் - காய வாக் மனமும், பொறியும்
- இந்திரியமும்,  வாயுவும் - உச்வாஸ நிச்வாஸமுமாகிய பிராணன்கள்,
கெடுதலால் - நாசமாவதனால், மரணம் - மரணமென்பதாகும், மற்று -
பின்பு,   அவை - அவைகள், போயுழி - கார்மண காயத்தோடு கூடிச்
சென்றவிடத்து, பெறுதல் - மறுபடியும்  அப்பிராணன்களைப் பெறுவது,
பிறவி  -   ஜனனமென்பதாக, ஆம் - ஆகும், போமிடத்து - அப்படி
மரணமாகிப்   போகுமிடத்தில்,    (ஜனனமென்னும்   பிராணன்களை
மறுபடியடைவதற்கு),   ஒன்று  இரண்டு  மூன்று - ஒன்றும் இரண்டும்
மூன்றும்,    ஆம்   -   ஆகிய,  கணங்கள் - ஸமயங்கள், ஏயும் -
இசைவனவாகும், எ-று.

     ஜீவன்கள்  கதியாந்தரங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் ஒரு
ஸமயம்   இரண்டு   ஸமயம்   மூன்று  ஸமயமாகிய காலங்களையும்
அக்கதியின்   விவரங்களையும்,  ஸுகபோதை யென்னும் தத்துவார்த்த
ஸூத்ர   வியாக்கியானமாகிய   கிரந்தத்தில்   2-வது  அதிகாரத்தில்
பார்த்துக்கொள்ளவும்.      பதார்த்த     ஸாரத்தில்    முப்பதாவது
அதிகாரத்திலும் விரிவாகக் காணலாம்.                      (302)

 1350. உரைத்தவிப் பிறப்புப பாத மூர்ச்சனை
      கருப்பமு மாமும்மைத் தேவர் நாரகர்க்
      குரைத்த வற்றுப பாதஞ் சராயுகங்
      கருப்பமா னவர்களுக் காவ தாகுமே.

     (இ-ள்.)    உரைத்த    -   சொல்லப்பட்ட, இப்பிறப்பு - இந்த
ஜனனமானது,     உபபாதம்   -   உபபாதமென்றும்,   மூர்ச்சனை -
ஸம்மூர்ச்சனையென்றும், கருப்பமும் - கர்ப்பமென்றும், மும்மையாம் -
மூன்றுபிரகாரமாகும்,   உரைத்தவற்று  -  சொல்லப்பட்ட இவைகளில்,
தேவர் - தேவர்களுக்கும்,   நாரகர்க்கு - நரகர்களுக்கும், உபபாதம் -
உப்பாதப்   பிறப்பாகும்,  மானவர்களுக்கு - மனிதர்களுக்கு, சராயுகங்
கருப்பம் - ஜராயு  படலத்தோடு   கூடிய கர்ப்பமானது, ஆவதாகும் -
ஆகப்பட்டதாகும், எ-று.                                 (303)

 1351. நம்மினுண் ணியவர்நா லறிவு காறுளார்
      சம்முச்சப் பிறவியர் விலங்கி லைம்பொறி