விம்மினார் சம்முச்சங் கருப்பத் தாவதாந்
தம்மிலுஞ் சராயுக மண்டம் போதமாம்.
(இ-ள்.) நம்மினுண்ணியவர் - நமக்குள் நுண்ணியராகிய
பஞ்சேந்திரிய லப்திய பரியாப்தக மனுஷ்யரும், நாலறிவு காறுளார் -
ஏகேந்திரிய த்வீந்திரிய த்ரீந்திரிய சதுரிந்திரிய ஜீவன்கள்வரை
உள்ளவரும், சம்முச்சப்பிறவியர் - ஸம்மூர்ச்சனாப் பிறப்புடையராவர்,
விலங்கில் - திரியக் ஜீவன்களில், ஐம்பொறி விம்மினார் -
பஞ்சேந்திரியங்களில் பிறப்பவர்கள், சம்முச்சம் - சில சம்மூர்ச்சனாப்
பிறப்பிலும், கருப்பத்து - சில கர்ப்பங்களிலும், ஆவதாம் -
ஆக்கப்பட்டதாகும், தம்மிலும் - அந்ததிரியக்கதி கர்ப்பங்களிலும்,
சராயுகம் - ஜராயுபடலத்தோடு கூடிப் பிறப்பதும், அண்டம் -
முட்டைகளில் பிறப்பதும், போதம் - குட்டிகளாகப் பிறப்பதும், ஆம் -
ஆகும், எ-று.
இவைகளின் விஸ்தாரங்களை ஸுகபோதை என்னும் நூலில்
இரண்டாவது அத்தியாயத்தில் பார்த்துக்கொள்ளவும். (304)
1352. யாவையுந் தோற்செவி யுடைய சன்னியாந்
தாவருந் துளைச்செவி சன்னிய சன்னியாம்
மேவருந் திருவறம் மேவுஞ் சன்னிக
ளோவிலாப் பிறப்பிவற் றியோனி யொன்பதாம்.
(இ-ள்.) ஓவிலா - இடைவிடாமல் பிறக்கும்படியான,
பிறப்பிவற்றின் - இந்தப் பிறப்புகளின், யோனி - ஜீவன்கள்
பிறக்கும்படியான யோனிஸ்தானங்கள், ஒன்பதாம் - ஒன்பது
பிரகாரமாகும், யாவையும் - இந்த ஜீவன்களில் யாவையும்,
தோற்செவியுடைய - தோல்காதுடையவைகள், சன்னியாம் -
ஸஜ்ஞிஜீவன்கள் ஆகும், தாவரும் - நீக்குவதற்கு அரிதாகிய,
துளைச்செவி - துளைக்காதுடைய ஜீவன்கள், சன்னிய சன்னியாம் -
சில ஸஜ்ஞிகளும் சில அஸஜ்ஞிகளிலுமாகும், சன்னிகள் -
ஸஜ்ஞிஜீவன்கள், மேவரும் - பெறுதற்கரிதாகிய, திருவறம் -
ஸ்ரீஜினதர்மத்தை, மேவும் - பொருந்தும், (சில பொருந்தாமையுமாகும்),
எ-று.
யோனிபேதங்களின் விவரங்களை ஸுகபோதையில் இரண்டாவ
ததிகாரத்தில் பார்த்துக்கொள்ளவும். (305)
1353. வினையுயிர் தத்தமில் விடுதல் வீடது
தனகுண நீங்கலுந் தவியஞ் சூனியம்
முனையவ ருடனுறல் முதல்வ னன்றுதா
னனகனாய்க் குணங்களு மனந்த மாகுமே. |