(இ-ள்.) வினை - (அசேதனமாகிய புத்கலாத்மகங்களாகிய)
கர்மங்களும், உயிர் - (சேதனாத்மகங்களாகிய) ஜீவன்களும், தத்தமில்
- தங்கள் தங்களிடமாக, விடுதல் - (சுத்த சேதனாபரிணாமத்தினால்
ஆத்மா ஸ்வரூபோபலம்பனமாகி கர்மங்களை பந்தத்தினின்றும்)
நீக்குதல், வீடது - மோட்சமாகும், தனகுண நீங்கலும் - ஆத்மா
கர்மபந்தத்துக்குக் காரணமான அசுத்தசேதனா பரிணாமமாகிய ராகாதி
விபாவ குணங்களில் நீங்குதலும், தவியம் - அசேதனா இதரத் திரவிய
குணக்ஙள் பற்றாமல், சூன்யம் - பரத்திரவியாதி சூன்யமாகி,
முனையவருடன் - லோகாக்கிரஸ்தாயிகளானவர்களுடன் ஒரு
தன்மையாக, உறல் - ஸித்தத்துவமடைதல், முதல்வன் - முதல்வன்
தன்மையான தனது ஸ்வபாவகுண ஸ்வயம்புவாகும், அன்று -
அப்பொழுது, தான் - தானென்னும் தன்னிலையானது (அதாவது :
சுத்த ஆத்மாவானது), அனகனாய் - பாபரஹிதனாகி, குணங்களும் -
தனது ஸித்த சுத்த குணங்களும், அனந்தமாகும் - முடிவில்லாமல்
ஸ்தாயிகளாகும், எ-று. (306)
1354. ஐம்பத்தைங் கணதரர்க் காதி யாங்கணத்
தைம்பத் தைந்திரட் டிபத்தாம் புவ்வத
ரைம்பதி னிரட்டிநாற் பத்தெட் டோதிய
ரைம்பதி னிரட்டியொன் பான்வி குவ்வணர்.
(இ-ள்.) கணத்து - அந்த விமல தீர்த்தங்கரருடைய
கணங்களில், ஆதியாம் - முதன்மையாகிய, ஐம்பத்தைங்கணதரர் -
கணதரர் ஐம்பத்தைந்து பெயர்களாகும், புவ்வதர் - பூர்வதரர்கள்,
ஐம்பத்தைந்திரட்டி பத்தாம் - ஆயிரத்து நூற்றுவராவர், ஓதியர் -
அவதிஜ்ஞானிகள், ஐம்பதினிரட்டி நாற்பத்தெட்டு -
நாலாயிரத்தெண்ணூற்றுவர், விகுவ்வணர் - விக்கிரியாரித்தி
பிராப்தர்கள், ஐம்பதினிரட்டி யொன்பான் - தொளாயிரவர்களாவர்,
எ-று.
(307)
1355. விலக்கில சையத ரறுபத்தெண் ணாயிரம்
இலக்கமூன் றெட்டெட்டா யிரங்கள் சாதவ
ரிலக்கமொன் றாயிர மூன்று காந்திய
ரிலக்கநான் கிரண்டுசா வகிய சாவகர்.
(இ-ள்.) விலக்கிலசையதர் - ஸம்பூர்ணஸம்யதர்கள்,
அறுபத்தெண்ணாயிரம் - அறுபத்தெண்ணாயிரம் பேர்களாவர், சாதவர்
- நவஸம்யதர்கள், இலக்க மூன்றெட்டெட்டாயிரங்கள் - மூன்று
லட்சத்து அறுபத்துநாலாயிரவர், காந்தியர் - ஆரியாங்கனைகள்,
இலக்கமொன்றாயிர மூன்று - இலக்ஷத்து மூவாயிரம் பெயர்களாவர்,
சாவகியர் - ஸ்ரீாவகிகள், இலக்க நான்கு - நாலுலட்சமாவர், சாவகர் -
ஸ்ரீரவகர்கள், இரண்டு - இரண்டு லக்ஷம் பெயர்களாவர், எ-று. (308) |