1356. இனையவாம் விமலனார் கணத்து நாதராய்
வினையெலா மறவெறி வேத நான்கினை
மனைதுற வாணருக் கோதி மற்றவர்
வினைகண்மே னினைவுறீஇ விவித்த மேவினார்.
(இ-ள்.) மற்றவர் - அந்த மேருமந்தரர் இருவர்களும்,
இனையவாம் - இத்தன்மையாகிய, விமலனார் - விமல
தீர்த்தங்கரருடைய, கணத்து - த்வாதசகணங்களுக்கு, நாதராய் -
முக்கியமானவர்களாகி, வினையெலாம் - கர்மங்களை யெல்லாம், அற
- நீங்க, எறி - கெடுக்கும்படியான, வேத நான்கினை -
சதுரனுயோகமாகிய ஸ்ரீுதத்தினை, மனைதுறவாணருக்கு -
ஸ்ரீவகர்களுக்கும் யதிகளுக்கும், ஓதி - உபதேசித்து, வினைகண்மேல் -
தங்களுடைய கர்மங்களின் மேல், நினைவுறீஇ - கெடுக்க
வேண்டுமென்கிற தியானத்தைப் பொருந்தி, விவித்தம் -
கணங்களினின்றும் வேறாகிப் பிரிந்து, மேவினார் - தனியான இடத்தை
யடைந்தார்கள், எ-று. (309)
1357. இனத்திடைப் பிரிந்துபோ மேறி ரண்டுபோற்
கணத்திடைப் பிரிந்துபோய்க் கான மேவிய
வனத்திடைப் பெருவரை யுச்சி மன்னினார்
நினைப்பினைத் தன்கணே நிறுத்தி நின்றரோ.
(இ-ள்.) இனத்திடை - கூட்டத்தினின்றும், பிரிந்துபோம் -
பிரிந்து செல்லுகின்ற, ஏறிரண்டு போல் - இரண்டு விருஷபங்களைப்
போல, கணத்திடை - கணங்களினின்றும், பிரிந்துபோய் - நீங்கிச்
சென்று, கானமேவிய - ஆரண்யத்தைச் சேர்ந்த, வனத்திடை - ஒரு
வனத்தில், நினைப்பினை - தியானத்தை, தன்கணே - தனது
ஆத்மனிடத்தில், நிறுத்தி நின்று - ஸ்தாபித்து நின்று, பெரும் -
பெரிதாகிய, வரையுச்சி - ஒரு பர்வத சிகரத்தை, மன்னினார் -
அடைந்தார்கள், எ-று. (310)
1358. வரைப்பினுங் குளிர்ப்பைசெய் மரத்தி னீழலு
மரைப்பினுஞ் சீதமாஞ் சந்தம் போலவும்
நிரைத்துநின் றினாதசெய் தவர்க்கு மின்பமா
முரைக்கணின் றுத்தமப் பொறையோ டோம்பினார்.
(இ-ள்.)வரைப்பினும் - தன்னை அறுத்தாலும், குளிர்ப்பைசெய் -
அறுப்பவனுக்கும் நிழலைத் தருகின்ற, மரத்தின் - மரத்தினது, நீழலும்
- நிழலையும், அரைப்பினும் - அரைத்த காலத்தும், சீதமாம் -
குளிர்ச்சியாகிய, சந்தம்போலவும் - சந்தனக் கட்டையையும் போலவும்,
நிரைத்துநின்று - வரிசையாகச் சேர்ந்துநின்று, இனாத - துன்பங்களை,
செய்தவர்க்கும் - செய்தவர்களுக்கும், இன்பமாம் - அவர் |