634மேருமந்தர புராணம்  


 

    ரன்புநீத் துயிரை யோம்பி யளவமைந் துண்ப ரார்க்கு
    துன்புறக் கோடல் வைத்தல் மலங்களைத் துறத்தல் செய்யார்.

     (இ-ள்.)    (பின்னரும்),    முன் - எதிரிலே,    நுகத்தளவு -
ஒருவில்லுப்பிரமாணம்,  நோக்கி - நன்றாகப் பார்த்து, முன்பு பின்பு -
முன்னும்    பின்னும்,     இரிய - ஜீவன்கள்      பாதை யடைந்து
நீங்கும்படியாக,    செல்லார் - செல்லாதவர்களாயும்,     (அதாவது :
ஈரியாஸமிதியுடையவர்களாயும்),  இன்சொலும் - இனிய வசனத்தையும்,
பிறர்    தமக்கு    -    அன்னியர்களுக்கு,       மிதத்தனவன்றி -
மிதமானவையில்லாமல்,சொல்லார் - சொல்லாதவர்களாயும், (அதாவது :
பாஷாஸமிதியுடையவர்களாயும்), அன்பு நீத்து    - ராகத்வேஷமின்றி,
உயிரை யோம்பி - ஸகல ஜீவன்களையும் உபசரித்து, அளவமைந்து -
அளவிற்    பொருந்தி (அதாவது :    மட்டுப்பண்ணி),    உண்பர் -
பவித்திராஹாரத்தை பொஜிப்பவர்களாயும் (அதாவது :  ஏஷணாஸமிதி
யுடையவர்களாயும்), ஆர்க்கும் - எவ்விதமானவர்களுக்கும், துன்புற -
துக்கமடையும்படியாக, வைத்தல் - ஒன்றை நிக்ஷேபிப்பதும், கோடல் -
ஆதானம் பண்ணுவதும், மலங்களை - மலமூத்திராதிகளை, துறத்தல் -
விடுதலும், (ஆகிய   இவைகளை),  செய்யார் - செய்யாதவர்களாயும்,
(அதாவது; ஆதான நிக்ஷேபணாஸமிதியுடையவர்களாயும்), (இவற்றோடு
வியுத்ஸர்க்கஸமிதியுடையவர்களாயும்      இந்தப்பஞ்சஸமிதிகளையும்
ஜிவரக்ஷணையின் பொருட்டுப் பொருந்தி), எ-று.              (316)

1364. இருத்தலே கிடத்தல் நிற்ற லியங்குதல் முடக்கல் நீட்டல்
     திருத்தியெவ் வுயிர்க்கும் தீமை செறிந்திடா வொழுக்க மோம்பி
     யுரைத்துயிர்க் குறுதி மார்க்க மோம்புவ கொடுப்பிற் கொண்டும்
     பரிக்கதப் பாவை மாரைப் பற்றறத் துறந்திட் டாரே.

     (இ-ள்.) இருத்தல் - பரியங்காஸனமாக- உட்கார்ந்திருத்தலாலும்,
கிடத்தல்    - சையாஸனமாகப்     படுத்திருத்தலாலும்,    நிற்றல் -
காயோத்ஸர்க்கமாக  யோகத்தில் நிற்கின்றதாலும், இயங்குதல் - சரியா
மார்க்கமாகச்      செல்கின்றதாலும்,      முடக்கல்      நீட்டல் -
ஹஸ்தபாதாதிகளை  முடக்குதலாலும் நீட்டுதலாலும், எவ்வுயிர்க்கும் -
ஸகல   ஜீவன்களுக்கும்,   தீமை செய்திடா - உபஸர்க்கம் செய்யாத,
ஒழுக்கம் - சாரித்திரமாகிய   காயகுப்தியை, திருத்தி - செம்மையாகச்
செய்து,    ஓம்பி - ரக்ஷித்தும் (அதாவது :    காயகுப்தம் செய்தும்),
உயிர்க்கு - பவ்விய   ஜீவன்களுக்கு, உறுதி மார்க்கம் - உறுதியாகிய
மோட்ச மார்க்கத்தை, உரைத்து - சொல்லியும் (அதாவது : அதனைச்
சொல்லி     வேறு    வார்த்தைகளைப் பேசாத தன்மையாகிய வாக்
குப்தியைடந்தும்),     ஓம்புவ   -   ரத்னத்திரய       விருத்திக்கு
ரக்ஷணையாகும்படியான   ஆகாராதிகளை,  (உபசரித  தன்மையால்),
கொடுப்பில்   - பத்ரசீலர்கள்      கொடுத்தால்,      கொண்டும் -
ஏற்றுக்கொண்டும்,            பரிக்கதப்           பாவைமாரை -
த்வாவிம்சதிபரீஷஹங்களென்னும்    உபாதிகளாகிய பாவைமார்களை,
பற்றற - ஆசையற, துறந்திட்டார் - நீக்கினார்கள் (அதாவது : மனோ
குப்தியையும் பொருந்தினார்கள்), எ-று.                     (317)