1365. நன்மைதீ மைக்கண் ணொத்து நாதன்றன் பாத மோதித்
தன்மைக்கண் ணின்றார் தம்மைப் பணிந்துதம் பிழைப்பின் மீண்டு
பின்னைத்தம் பால்வந் தெய்தும் பிழைப்பைமுன் மறுத்துக் காயந்
தன்னைத்தாம் விட்டு நின்றார் தடவரைச் சூளி யொத்தார்.
(இ-ள்.) நன்மை தீமைக்கண்ணொத்து - நன்மை தீமைகளிடத்து
ஒரு தன்மைத்தாகியும், (அதாவது : நன்மை வந்தபோதிலும் தீமை
வந்தபோதிலும் யதாஸ்வரூபமறிந்து சமானமாயிருக்கிற ஸாமாயிக
பாவனை செய்தும்), நாதன் தன் - திரிளோகேஸ்வரனாகிய அரஹந்த
பகவானுடைய, பாதம் - திருவடிகளை, ஓதி - சொல்லி ஸ்துதி
செய்தும், தன்மைக்கண்ணின்றார் தம்மை - ஸ்வரூபத்திலும் ஸ்வரூப
பாவனையிலுமிராநின்ற பஞ்ச பரமேஷ்டிகளை, பணிந்து -
வணங்குதலாகிய வந்தனை செய்தும், தம் - தங்களுடைய, பிழைப்பின்
- குற்றங்களினின்றும், மீண்டும் - நீங்கியும், (அதாவது : நீங்குதல்
பாவனையாகிய பிரதிக்கிர மணஞ் செய்தும்), பின்னை - (அப்படிப்
பிரதிக்கிரமண குணத்திலிருந்தும்) பிறகு கர்மோதய வசத்தால், தம்பால்
- தங்களிடத்தே, வந்தெய்தும் - வந்தடையப்பட்ட, பிழைப்பை -
குற்றங்களை, முன் மறுத்து - முன்னே மறுத்தும் (அதாவது :
ஆலோசனாதி பூர்வகமாகிய விவேக பலத்தினால் பிராயச்சித்த -
விதானஞ் செய்கின்ற பிராயச்சித்த பாவனையடைந்தும்), காயந்தன்னை
- சரீரத்தையும், தாம் -அவர்கள் தாம், விட்டு - விடுத்து (அதாவது :
அதனை நமதல்லவென்று மனதில் பாவிக்கின்ற வியுத்ஸர்க்க பாவனை
யடைந்தும்), நின்றார் - இந்த ஷடா வசியக் கிரியைகளில் கூடி
நின்றார்கள், (அப்படி நின்றவர்கள்), தடம் - விசாலம் பொருந்திய,
வரை - பர்வதத்தின்,சூளியொத்தார் - சிகரத்துக் கொருவாறு ஒப்பாகச்
சலனமின்றி நின்றார்கள், எ-று. (318)
1366. ஆதப யோகந் தாங்கி யருந்தவர் நின்ற போழ்திற்
பாதவம் போது கொண்டு பணிந்தன பனியைச் சேரச்
சீதபங் கயங்கள் கூம்ப விரிந்தசெங் கமலஞ் சிந்தை
மாதவர் மரத்தைச் சேர மகிழ்ந்துவான் பொழிந்த வன்றே.
(இ-ள்.) ஆதபயோகம் - ஆதபயோகத்தை, தாங்கி - தரித்து,
அருந்தவர் - அரிய தபஸையுடைய மேருமந்தரரிருவர்களும், நின்ற -
மலைமேல் நிற்கின்ற, போழ்தில் - கோடை காலத்திலே, பாதவம் -
விருட்சங்கள், போது கொண்டு - புஷ்பங்களைக் கொண்டு, பணிந்தன
- வணங்கின, பனியைச்சேர- ஹிமத்காலயோகத்தில் நிற்க, (அதாவது :
மறைவு இல்லாத கடற்கரை முதலான இடத்தில் வெள்ளாகாசத்தை
யடைந்து
யோகத்தில் நிற்க), சீதம் - பனியின் சீதத்தினால்,
பங்கயங்கள் - தாமரை புஷ்பங்கள், கூம்ப - வாடி நாசமெய்த, சிந்தை
- இவர்கள் மானதாகிற, செங்கமலம் - செந்தாமரை புஷ்பம், (ஆத்மத்
தியானத்தினால்), விரிந்த - மலர்ந்தது, மாதவர் - மஹா
தபத்தையுடைய இவ்விருவர்களும், (அந்த |