பொதுவினால் - சாமான்யத்தினால், அறிவின் முன்பு - ஞான
குணத்துக்கு முன்னே, புலத்தைக் கொண்டு - இந்திரிய விஷயங்களைக்
கொண்டு, அனேகமாய் - பலவித பேதமாய் சக்ஷுதர்சனாதியாகிய, தன்
விதி - தனது அந்த தர்சனாவரணீய கர்மங்கள், அறக்கெட -
முழுமையும் நீங்க, ஒன்றாகி - ஒப்பற்றதாகி, விரியுமாறு - அனந்த
தர்சனமென்னும் ஸம்பூர்ண சுத்த தர்சனமாய் ஆத்ம திரவிய குணமாக
வியாபகமாகின்ற நிஜருசி லக்ஷணமாகி நிராகாரமாகிய குணத்தையும்,
உன்னினார் - ஸம்மியக்ஞான தர்சன பலத்தால் ஸ்வஸம் வேதன
பிரத்தியக்ஷத்தால் பாவித்தார்கள், எ-று. (323)
1371. சுகதுக்க மோக மாகிச் சுழலுஞ்சே தனசு கத்தைத்
தகைவைசெய் யந்த ராயந் தம்மொடு மோக நீங்க
முகைவிட்ட நாற்றம் போல முழுதும்வந் தெழுந்த னந்த
சுகமற்ற தாகு மென்று துளக்கற நினைந்து நின்றார்.
(இ-ள்.) (மேலும்), சேதன சுகத்தை - அதீந்திரிய துருவ சுத்த
சைதன்ய சுகத்தை, சுகம் - அநித்திய இந்திரிய சுகமும், துக்கம் -
துக்கமும், மோகமாகி - மயக்கமுமாகி, தகைவைசெய் -
தடைசெய்கின்ற, சுழலும் - சுழல்வதாகிய, அந்த ராயந் தம்மொடு -
பஞ்சப்பிரகார அந்தராய கர்மங்களோடு, மோகம் - தர்சன சாரித்திர
விகல்பமாகிய மோஹனீய கர்மங்களும், நீங்க - நிரவசேஷமாய் விலக,
முகைவிட்ட நாற்றம்போல - மொக்கவிழ்ந்து மலர்ந்து வெளிப்படுத்திய
வாசனையைப் போல, முழுதும் வந்து - ஆத்மனுக்குத் தனது ஸ்வரூப
முழுக் குணமும் வந்து, எழுந்து - வியாபகமாகி, மற்றது - அந்தத்
தன்மையானது, அனந்த சுகமாகுமென்று - அனந்த
ஸௌக்கியமாகுமென்று, துளக்கற - சலனமின்றி, நினைந்து நின்றார் -
பாவித்து நின்றார்கள், எ-று. (324)
1372. வீரியாந் தராய நீங்க விகலத்தி னீங்கி வீரங்
காரியங் கடையி லாது கணத்திலே முடித்த ளந்து
மூரிமூ வுலகந் தன்னை யேந்தலு மாகு மாற்றல்
வீரிய மாகு மென்றில் விதியுளி நினைந்திட் டாரே.
(இ-ள்.) (பின்னர்), வீரியாந்தராயம் - வீரியாந்தராய கர்மமானது,
நீங்க - ஆத்மனிடத்தினின்றும் விலக, வீரங்காரியம் -
வீர்யகுணமானது, விகலத்தினீங்கி - குறைபாட்டினின்றும் நீங்கி,
கடையிலாது - முடிவில்லாது (ஸம்பூர்ண நிலையாகி), கணத்திலே -
ஒரு ஸமயத்திலே, மூரி - பலமாகிய, மூவுலகந்தன்னை -
மூன்றுலகத்தையும், அளந்து முடித்து - பிரமாணித்து, ஏந்தலும் -
தரித்தலும், ஆகும் - ஆகும்படியான, ஆற்றல் - சக்தியானது,
வீரியமாகுமென்று - அனந்த வீரிய குணமாகுமென்று, இவ்விதி -
இந்தக் கிரமத்தையும், உளி - உள்ளிட்டு, நினைத்திட்டார் -
தியானித்தார்கள், எ-று. (325) |