640மேருமந்தர புராணம்  


 

ஸ்வருப   பரரூப)   குணங்கள்,  நிற்றலும் - (ஸ்யாத்வாத ஸப்தபங்கி
நியாயத்தால்     நாம,      ஸ்தாபனா,       திரவிய பாவங்களால்,
உத்பாதவ்யயத்ரௌவ்யயுக்தமாய்) நிற்கும் தன்மைகளையும், மனமுடை
- ஸ்ரீதஞானபாவனா பலத்தால் மனதிலுடைத்தாகிய, அவர் - அவ்விரு
முனிவர்களும்,    சிந்தியா     - (தங்களுடைய ஆத்ம ஸ்வரூபத்தை
மாத்திரம் ஏகமென்றும் சாஸ்வதமென்றும் ஞான தர்சன நாயகமென்றும்
சேஷங்கள்     ஸம்யோகங்களென்றும்     ஏகத்துவ அன்னியத்துவ
பிரதக்த்துவ  அப்பிரதக்த்துவ ஸ்வரூபங்களைத்) தியானித்து, தத்தம் -
தங்கள், தங்களுடைய, அணவரும் - நெருங்குதற்கரிய, பமாதம் விட்டு
- பஞ்சதச     ப்ரமாதங்களை நீக்கி, அப்பமத்தாராய் - அப்பிரமத்த
குணஸ்தானவர்த்திகளாகி,  இணையிலா - உபமையில்லாத, சேணிமேல்
- க்ஷபகபேஸ்ரீணி  யென்கிற குணஸ்தான வரிசையின் மேல், ஏறினார் -
கிரமமாக ஆரோகணித்தார்கள், எ-று.

     மற்று - அசை.                                    (327)

1375. வினைகளேழ் விரகினால் வீழ்ந்த வக்கண
     முனிவர்புவ் வாணிநன் முனிவ ராயினார்
     வினையெலா நிலைதளர்ந் திட்டு திர்ச்சிக
     டனையடைந் திட்டநால் வகையி னாற்பினை.

     (இ-ள்.)   அக்கணம்   - அந்த அப்பிரமத்த குணஸ்தானத்தில்
க்ஷபகபேஸ்ரீணி நிலையில் ஏறிய காலத்து, விரகினால் - கிரமத்தினால்,
வினைகளேழ்      - (மித்தியாத்துவ,        ஸம்மியக்மித்தியாத்துவ,
ஸம்மியக்த்துவபிரகிருதி,       அனந்தானு பந்திகுரோத, மான, மாயா,
லோபமென்னும் தர்சன மோஹனீயமாகிய) ஸப்த பிரகிருதிகள், வீழ்ந்த
- கெட்டன, (அதன்   மேல்),     முனிவர் - இவ்விரு முனிவர்களும்,
புவ்வாணி     நன்முனிவராயினார்   - அபூர்வ   கரண குணஸ்தான
வர்த்திகளானார்கள், (அந்த     அபூர்வ   கரண குண ஸ்தானத்தில்),
வினையெலாம்      - மற்ற கர்மங்களெல்லாம், நிலை தளர்ந்திட்டு -
தளர்வுபட்டுக்குறைந்து,    நால்வகையினால் - (பந்த, ஸத்துவ, உதய,
உதீரணாவென்னும்)   நான்கு  விதத்தால், உதிர்ச்சிகடனையடைந்த -
நிர்ஜரிக்கின்ற நிலைமையைடைந்தன, பினை - அதன்  பின்பு,  எ-று.

     தனை - சாரியை.                                 (328)

1376. நின்றுழி நிலாதசுக் கிலத்தி யானத்தோ
     டன்றவ ரணியட்டி முனிவ ராயினார்
     சென்றன சிலபல கணங்கள் சென்றபின்
     வென்றனர் வினைகளீ ரெட்டை வீரரே.

     (இ-ள்.)    நின்றுழிநிலாத - ஒரு விதமாக நின்றவிடத்திலேயே
நில்லாமல்      ஸமயந்தோறும்    வேறே      வேறே விர்த்தியாகி
அவலம்பனமாகின்ற, சுக்கிலத் தியா