சமவசரணச்சருக்கம்645


 

     (இ-ள்.) (பின்னர்  அவர்கள்), உள் - உள்ளே, எழும் - பற்றி
வியாபித்த,   தீயினால் - அக்கினியினால், வெந்து - எரிதலுற்று, ஒளி
பெற்ற   - பிரகாசம்    பொருந்திய, விறகைப் போல - காஷ்டத்தை
யொப்ப,           வெள்ளையத்             தியானந்தன்னால் -
சுக்கிலத்தியானாக்கினியினால்,வெந்து - கர்மங்கள் எரிந்து, எரியுமிழ -
ஆத்மப்பிரகாசம் தோன்ற, மேனி - சரீரமானது, பள்ளி கொண்டிடுதல்
- சயனித்தலும்,   மூத்தல் - விருத்தாவஸ்தை யடைவதும், பசித்தல் -
க்ஷுத்பாதாதி    பீடி   தங்களும், நோய் - வியாதிகளும், வேட்கை -
ஆசையும்,    இன்றி   -    இல்லாமல், பிள்ளையாதித்தன் போல -
பாலசூரியனைப்   போல, (தோன்ற ஆத்ம ஜோதியால்), பிறப்பிருள் -
ஸம்ஸாரத்தில்   தோன்றிச் சுழலும்படியான அந்தகாரத்தை, துர்த்து -
நீக்கி,   இருந்தார்   -  வீதராக சுத்தோபயோகிகளாகி யிருந்தார்கள்,
எ-று.                                                (337)

1385. பயம்பகை பணித்த லார்வஞ் செற்றமே கவர்ச்சி சோகம்
     வியந்திடல் வெகுளி சோபம் வேர்த்திடல் விரும்பல் கேதம்
     மயங்குதல் தெளிதல் சிந்தை வருந்துதல் களித்தல் மாயம்
     இயம்பருந் திறத்த வின்ன யாவையு மெறிந்த ருந்தார்.

     (இ-ள்.)  (இன்னும்),  பயம்  - அச்சமும், பகை - விரோதமும்,
பணித்தல்     -  ஏவலிடுதலும், ஆர்வம்   -  அன்பும்,   செற்றம் -
துவேஷமும்,   கவர்ச்சி   - ஒற்றைக் கிரகிக்கும் குணமும், சோகம் -
சோர்வும்,    வியந்திடல் - ஆச்சரியப்படுதலும், வெகுளி - கோபமும்,
சோபம்     -     அலங்கரிப்பும், வேர்த்திடல் - வேர்வை விடுதலும்,
விரும்பல்  - ஒன்றைக் கருதுவதும், கேதம் - துக்கமும், மயங்குதல் -
கலங்குதலும்,    தெளிதல் - ஆராய்ந்தறிதலும், சிந்தை வருந்துதல் -
மனதிற்   கஷ்டமுறுவதும், களித்தல் - சந்தோஷப்படுவதும், மாயம் -
வஞ்சமும், (ஆகிய),     இயம்பரும் - சொல்லுதற்கரிய,    இன்ன -
இத்தன்மையாகிய,       யாவையும் -    ஸகல   விபாவங்களையும்,
எறிந்திருந்தார் - கெடுத்து நின்றார்கள், எ-று.                (338)

1386. ஆயிடை யமரர் தங்கண் முடியொடா சனந்து ளங்கப்
     பாயநல் லவதி யென்னும் பருதியாற் கண்ட தெல்லாம்
     ஆயிரங் கண்ணி னானை யதிபதி யாகச் சூழ்ந்து
     மாயிரும் விசும்பும் மண்ணும் மறையவா னவர்கள் வந்தார்.

     (இ-ள்.)   ஆயிடை   -   அப்பொழுது,     அமரர்தங்கள் -
சதுர்ணிகாயாமரர்களுடைய,  முடியொடு - கிரீடங்களோடு, ஆசனம் -
இருக்கும்  ஆஸனங்களும்,  துளங்க - சலிக்க, பாய - பரவிய, நல் -
நன்மையாகிய,  அவதியென்னும் - அவதிஜ்ஞானமென்னும், பருதியால்
- ஒளியால், (அவர்கட்கு),  எல்லாம்  - யாவும், கண்டது - தெரிந்தது,
(அவ்வாறு    விளங்கிய   மாத்திரத்தில்    அப்பொழுதே), ஆயிரங்
கண்ணினானை    -   ஸஹஸ்ராக்ஷனாகிய     ஸௌதர்மேந்திரனை,
அதிபதியாக -