வும், உயர்வற உயரிய - தமக்கு மேலான உபமையில்லாத
மேம்பாடுடையனவும், (ஆகிய), நும் - உங்களுடைய, துணையடி -
பாதங்களை, தொழுதும் - வணங்குகின்றோம், (என்று துதித்தார்கள்),
எ-று. (348)
1396. இனையன துதியினோ டிமையவ ரிறைவரை
மனமலி யுவகையின் வழிபடு முறைநாள்
வினைவழி யாமும்மை யோகுவி யோகுசெய்
கனமலி யூணில யோகிக ளானார்.
(இ-ள்) இனையன - இத்தன்மையனவாகிய, துதியினோடு -
தோத்திரங்களுடன், இமையவர் - சதுர்ணிகாயமார்கள், இறைவரை -
நாதர்களாகிய இங்விருஜினர்களையும், மனமலி - மனதில் நிறைந்த,
உவகையின் - ஸந்தோஷத்தினால், வழிபடும் முறைநாள் - முறையாக
வணங்கிச் செல்கின்ற காலத்தில், (அவர்கள்), வினைவழியாம் - கர்ம
வழியாகிய, மும்மையோகு - மனவரனகாயமென்னும் கர்மக்
கூட்டங்களை, வியோகுசெய் - நீக்குதல் செய்கின்ற, கனமலி -
உயர்ச்சி பொருந்திய, ஊணில் - இதரபுத்கலஸ்வீகாரமாகாத,
அயோகிகளானார் - அயோகிகேவலி குணத்தை யடைந்தார்கள்,
எ-று. (349)
1397. ஆயிடை யைந்தினோ டெண்பது வெவ்வினை
மாய வெழுந்து கணத்துல குச்சியை
மேயினர் விண்ணவர் மண்ணவர் மேனிகட்
காய சிறப்பொடு வந்தன ரங்கே.
(இ-ள்.) ஆயிடை - அந்த அயோகி கேவலி குணஸ்தான
காலமான அந்தர் முகூர்த்தாந்தியத்தில், ஐந்தினோடெண்பது
வெவ்வினை - வெவ்விய அகாதி கர்மங்களாய் நின்ற எண்பத்தைந்து
பிரகிருதிகள், மாய - கெட, எழுந்து - ஆத்மன் ஊர்த்துவகதி
ஸ்வபாவனாக, கணத்து - அந்த ஸமயத்திலேயே, உலகுச்சியை -
மூன்று லோகத்துக்கும் உச்சியாகிய ஸித்தி க்ஷேத்திரத்தில், மேயினர் -
பொருந்தினார்கள், (அப்பொழுது), விண்ணவர் - தேவர்களும்,
மண்ணவர் - மனிதர்களும், மேனிகட்கு - பரிநிர்வாணமடைந்த
அவர்களுடைய சரீரங்களுக்கு, ஆய - செய்யும்படி முறைமையாகிய,
சிறப்பொடும் - பூஜாதிரவியத்தோடும், அங்கே - அவ்விடத்திலே,
வந்தனர் - வந்தார்கள், எ-று. (350)
வேறு.
1398. பொன்னரி மாலை சாந்தஞ் சுண்ணம்பூ மாலை தூம
மின்னன பலவு மேந்தி யிமையவ ரிறைஞ்சு மெல்லை
மின்னென முனிவர் மேனி மறைந்தன வியந்து நோக்கிப்
பன்னருந் துதிய ராகி வானவர் பணிந்து போனார். |