சமவசரணச்சருக்கம்651


 

     (இ-ள்.) பொன்னரிமாலை  -  பொன்னாலாகிப்  பிரகாசிக்கின்ற
மாலைகளும்,    சாந்தம்     -     சந்தனாதிகளும்,    சுண்ணம் -
கந்தப்பொடிகளும், பூமாலை - புஷ்பமாலை முதலியவைகளும், தூமம்
- அகில்    தூபம்     முதலியவைகளும்,    (இன்னும்), இன்னன -
இத்தன்மையனவாகிய, பலவும் - அனேக வஸ்துக்களும், ஏந்தி - மேற்
கூறியபடி தாங்கிக்கொண்டு வந்து அர்ச்சித்து, இமையவர் - தேவர்கள்,
இறைஞ்சுமெல்லை    - பரிநிர்வாண     பூஜையை விதிப்படி செய்து
வணங்குகின்ற காலத்தில், முனிவர் மேனி - இவ்விரு முனிவர்களாகிய
மேருமந்தரரென்னும்    பட்டாரகர்களது     சரீரங்கள், மின்னென -
தோன்றிமறையும்    மின்னற்     கொடியைப்போல,    மறைந்தன -
அத்திர்சயமாயின, (அப்பொழுது),   வானவர்   - தேவர்கள், வியந்து
நோக்கி     - ஆச்சரியத்தையடைந்து    பார்த்து,      பன்னரும் -
சொல்லுதற்கரிய,   துதியராகி    - ஸ்துதிகளையுடையராகி, பணிந்து -
வணங்கி, போனார் - தமதிடமடைந்தார்கள், எ-று.             (351)

வேறு.

1399. முடிவிலாத் தடுமாற்ற முதல்கிழிய மூவமிர்த முறையிற் றோன்றி
     யிடையிலாம் வினைமுதலா மோகமெறிந் தார்வமிலா வியல்பிற்
                                            றோன்றிக்
     கடையிலாக் காதிகெடக் காட்சிவலி யறிவின்பங் கண்ணே
                                                தோன்றித்
     தொடர்வெலா மறவெறிந்து தோன்றிநாற் குணத்திலுநற் சுயம்பு
                                             வானார்.

     (இ-ள்.) (அதன்   மேல்     மேருமந்தரர்கள்),    முடிவிலா -
அளவில்லாமலனாதியாகிய,   தடுமாற்றம்   - சம்ஸாரத்துக்கு, முதல் -
காரணமாகிய மித்தியாத்துவமென்னும் தர்சன மோஹனீயமானது, கிழிய
- கெட,    மூவமிர்தம்  - ஸம்மியக் தர்சன ஞான சாரித்திரமென்னும்
ரத்னத்திரயமாகிய   மூவமிர்தங்கள்,  முறையிற்றோன்றி - லப்திபஞ்சக
வசத்தினாற்   கிரமமாகச் கூடி, யிடையிலாம் - ஆத்மனிடத்திலாகின்ற,
வினை  முதலாம்   - கர்ம  காரணமாகிய, மோகமெறிந்து - சாரித்திர
மோஹனீயத்தையுங்   கெடுத்து,    ஆர்வமிலா  -     விபாவமாகிய
ராகத்துவேஷமில்லாத,    இயல்பிற்றோன்றி  - ஸ்வபாவ  பரிணதியில்
தோன்றி,  கடையிலாக்காதிகெட - முடிவில்லாத காதி கர்மமான மற்ற
ஞானாவரண தர்சனாவரண அந்தராயங்களும் கெட, காட்சி - அனந்த
தர்சனமும்,   வலி  - அனந்த வீர்யமும், அறிவு - அனந்த ஞானமும்,
இன்பம்    - அனந்த  ஸௌக்கியமும்,   கண்ணே - தம்மிடத்திலே,
தோன்றி   - உண்டாகி,   தொடர்வெலாம்     -        மறுபடியும்
சம்பந்தங்களாயிராநின்ற     அகாதி     கர்மங்களெல்லாம்,   அற -
நீங்கும்படியாக,     எறிந்து  - கெடுத்து, நாற்குணத்திலுந் தோன்றி -
அவ்வியாபாதத்துவம் அதிஸூக்ஷ்மத்துவம் அகுருலகுத்து