652மேருமந்தர புராணம்  


 

வம்  அவககனத்துவம்  என்னும் நாலு குணங்களிலும் தோன்றி, நல் -
நன்மையாகிய,  சுயம்புவானார்    -  சுத்த நிச்சய ஸ்வரூபமானார்கள்,
எ-று.                                                 (352)

1400. மணமலிந்த ஒளியெனவு மலர்நிறைந்த விரையெனவும் மல்கு
                                                சந்தின்
     துணியுமிழ்ந்த தண்மையினுந் தோன்றியவப் பேரின்பத் துள்ளே
                                                தோன்றி
     யிணைபிறிது மிலராகி யிமையவரும் மாதவரு மிறைஞ்சி யேத்தப்
     பணிவரிய சிவகதிய னமர்ந்திருந்தா ரறவமிர்த முண்டா ரன்றே.

     (இ-ள்.)  (இன்னும்), அறவமிர்தமுண்டார்  - தர்மாமிருதத்தைக்
கேட்டு அனுபவித்த இவ்விருவர்களும், மணி - ரத்தினத்திலே, மலிந்த
- நிறைந்த,  ஒளியெனவும் - பிரகாசம்போலவும், மலர் - புஷ்பத்திலே,
நிறைந்த  - வியாபித்திரா நின்ற, விரையெனவும் - வாஸனைபோலவும்,
மல்கு  - நறுமணம் நிறைந்த, சந்தின் துணி - சந்தனக் கட்டையானது,
உமிழ்ந்த   - சொரிந்த,    தண்மையினும்  - குளிர்ச்சியைப்போலவும்,
தோன்றிய  - ஆத்மஸ்வபாவமாக  உண்டாகிய, அப்பேரின்பத்துள்ளே
தோன்றி   - அந்தப்  பெரிதாகிய அனந்தஸௌக்கியத்திலே விளங்கி,
இணைபிறிது   மிலராகி    -    உபமாதீதர்களாகி,   இமையவரும் -
தேவர்களும்,  மாதவரும் - கணதராகி மஹா முனிவர்களும், இறைஞ்சி
- வணங்கி,   ஏத்த  - தோத்திரம் செய்ய, பணிவரிய - தாழ்வில்லாத,
சிவகதியில்     - மோட்ச    கதியில்,  அமர்ந்திருந்தார் - பொருந்தி
நின்றார்கள், எ-று.                                      (353)

வேறு.

1401. மதுரைநல் லிராமை தேவன் மலையிற்சீ தரைகா விட்டத்
     ததிர்கழ லமரன் பின்னு மரதன மரதன மாலை வானேன்
     விதியினா லச்சு தைக்கண் வீதபீ தன்னி லாந்தைக்
     கதிபதி யாதித் தாபன் மேருநல் லகதி வேந்தன்.

     (இ-ள்.) (மேருவென்பவன்), மதுரை - ஆதியில் மதுரையென்கிற
பிராம்மண     ஸ்த்ரீயாய்,   (பிறகு), நல் - நன்மையாகிய, இராமை -
இராமதத்தா    தேவியாகிய, (அதன்    பிறகு), தேவன்  - பாஸ்கரப்
பிரபனென்னும்   நாமமுடைய தேவனாகி, (கற்பத்திற்றோன்றிப் பிறகு),
மலையில்     - விஜயார்த்த பர்வதத்தில், சீதரை - ஸ்ரீதரை யென்னும்
ஸ்த்ரீயாய்,   (பின்பு),  காவிட்டத்து - காபிஷ்ட கல்பத்திலே, அதிர் -
சப்தியாநின்ற,    கழல்     -   வீரகண்டயத்தை யணிந்த, அமரன் -
தேவனாகித்