சமவசரணச்சருக்கம்653


 

தோன்றி,  பின்னும்  - அதன் பின் அரதன மாலை - இரத்தினமாலை
யென்னும்   ஸ்த்ரீயாகப்    பிறந்து, (அதன்  பின்னும், விதியினால் -
கிரமத்தினால்,    அச்சுதைக் கண் - அச்சுதகல்பத்திலே, வானோர் -
தேவனாகப்    பிறந்து, (அதன் பின்பு), வீதபீதன் - வீதபயனென்னும்
பெயர்பெற்ற    பல  தேவனாகிப் பிறந்து, (பிறகு), லாந்தைக்கதிபதி -
லாந்தவகல்பத்துக்கதிபதியாகி,  ஆதத்தாபன் - ஆதித்யாபன் என்னும்
பெயர்  பெற்று, (பின்பு), மேரு - மேருவென்னும்  பெயருடையவனாய்
மனுஷ்ய    கதியிற்றோன்றி, நல் அகதிவேந்தன் - (இனிப் பிறக்கின்ற
கதியில்லாது)    நன்மையாகிய    மோட்சத்தையுற்றுத்     திரிலோக
பூஜ்யனாகும் தன்மையடைந்தான், எ-று.                    (354)

1402. வாருணி பூர சந்தன் வானவன் மங்கை வானோன்
     ஏரணி யிரத னாயு தன்னச்சு தன்வி பீடண
     னாரழல் நரகன் வேந்த னமரன்பின் சயந்த னம்பொற்
     றாரணி தரணன் பைந்தார் மந்தரன் சிவக திக்கோன்.

     (இ-ள்.) (மந்தரனென்பவன்),   வாருணி  - வாருணியென்னும்
பிராம்மண   புத்திரியாக     இருந்து, (பின்பு), பூரசந்தன்  - பூர்ணச்
சந்திரனாகிய    அரசகுமாரனாகி, (பின்பு), வானவன்  - தேவனாகிப்
பிறந்து, (பின்பு), மங்கை - யசோதரை யென்னும் ஸ்த்ரீயாக  ஜனித்து,
(மறுபடி), வானோன் - தேவனாகி, (பின்பு), ஏரணி  - அழகையணிந்த,
இரதனாயுதன்   - இரத்தினாயுதனென்னும்   ராஜகுமாரனாகி, (பின்பு),
அச்சுதன்   - அச்சுத   கல்பத்துத் தேவனாகி, (பிறகு),  விபீடணன் -
விபீஷணனென்னும் வாஸுதேவனாகிப் பிறந்து (பின்பு),ஆர் - நிறைந்த,
அழல்  - அக்கினியையுடைய, நரகன்  - நரகனாய்ப் பிறந்து, (அங்கு
நின்றும் பூமியில் வந்து), வேந்தன் - ஸ்ரீ தாமாவென்னும்  அரசனாகி,
(மறுபவத்தில்), அமரன் - பிரம்மகல்பத்திற்றேவனாகித் தோன்றி,  பின்
- பின்பு,    சயந்தன் - ஸயந்தனென்னும் ராஜபுத்திரனாகி,  (மறுபடி),
அம்பொன்    - அழகிய    பொன்னாலாகிய,     தாரணிதரணன் -
மாலைகளணிந்த   தரணேந்திரனாகி,    (மறுபவத்தில்),   பைந்தார் -
பசுமைபொருந்திய     மாலைகளை    யணிந்திராநின்ற,  மந்தரன் -
மந்தரனென்னும்    இராஜகுமாரனாய்ப்      பிறந்து,   (தபம்செய்து),
சிவகதிக்கோன்   - மோட்சகதியிலுற்றுத்   திரிளோக     பூஜ்யனான
சாசுவதப்பதவியை யடைந்தவனானான், எ-று.                (355)

வேறு.

1403. இனையது வெகுளியி னியல்பு மாற்றியல்
     பினையது வினைகளி னியல்பு பற்றியல்
     பினையது பொருளின தியல்பு வீட்டியல்
     பினையது திருவறத் தியல்பு தானுமே.