654மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  வெகுளியினியல்பு     -      குரோதத்தினாலாகின்ற
ஸ்வபாவமானது,   இனையது     -  இப்புராணத்தில்  சொல்லப்பட்ட
சத்தயகோஷன்      முதலானவர்களின்    சரித்திரத்திற்      கூறிய
இத்தன்மையானது,   மாற்றியல்பு - ஸம்ஸாரப் பிறப்புகளின் இயல்பும்,
இனையது     -     இந்தப்    புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற
இத்தன்மையானது,    வினைகளின்    இயல்பு  - கர்மங்களினுடைய
ஸ்வரூபமும்,     இனையது    -   இத்தன்மையதாகும், பற்றியல்பு -
லோபமாகிய    ஆசையின்     இயற்கையும்,    இனையது - இதில்
சொல்லப்பட்ட   இத்தன்மையாகும்,    பொருளினதியல்பு  - ஜீவாதி
திரவியங்களின்    ஸ்வரூபங்களும், இனையது - இத்தன்மையதாகும்,
வீட்டியல்பு    -   மோட்சத்தினது     இயல்பும்,     இனையது -
இத்தன்மையதாகும்,  திருவறத்தியல்பு தானும் - ஸ்ரீஜின தர்மத்தினது
விதமும், இனையது - இதிற்சொன்ன இத்தன்மையதாகும், எ-று.

     இரண்டமடியிலும் மூன்றாமடியிலுமுள்ள இனையதென்பது முடிபு
நோக்கித் தீபகமாக இரண்டிரண்டிடங்கட்குக் கூட்டப்பட்டது.   (356)

1404. அறமல துறுதிசெய் வார்க டாமிலை
     மறமலா திடர்செய வருவ தும்மிலை
     நெறியிவை யிரண்டையும் நினைந்து நித்தமுங்
     குறுகுமி னறநெறி குற்ற நீங்கவே.

     (இ-ள்.)  அறமலது   - தர்மமேயல்லாமல், உறுதி செய்வார்கள்
தாம்   -    ஆத்மனுக்கு உறுதியான தன்மை செய்பவர்கள், இலை -
இல்லை,    மறமலாது   - பாபமேயல்லாமல், இடர் செய வருவதும் -
துன்பஞ்     செய்ய     வருவதும்,  இலை - வேறில்லை, நெறியிலை
யிரண்டையும்     -    இவ்விரு     மார்க்கங்களையும், நினைந்து -
மனதிலெண்ணி,     நித்தமும்  -     நாள்தோறும்,  குற்றம் நீங்க -
பாபகாரணமாகிய ராகத்துவேஷ மோஹாதி குற்றங்கள் விலகும்படியாக,
அறநெறி  -  தர்மாமருதமாகிய ஸம்மியக் தர்சனாதிரத்னத் திரயமாகிற
மோட்சமார்க்கத்தை,    குறுகுமின்    -   ஜீவர்களே! அடையுங்கள்,
எ-று.                                                 (357)

1405. ஆக்குவ தேதெனி லறத்தை யாக்குக
     போக்குவ தேதெனில் வெகுளி போக்குக
     நோக்குவ தேதெனில் ஞான நோக்குக
     காக்குவ தேதெனில் விரதங் காக்கவே.

     (இ-ள்.) ஆக்குவது - செய்யும்படியான காரியமானது, ஏதெனில்
- என்னவென்றால்,   அறத்தை   - ஸ்ரீஜின தர்மத்தையே, ஆக்குக -
செய்க,     போக்குவது         - நீக்க   வேண்டியது, ஏதெனில் -
என்னவென்றால்,        வெகுளி - கோபத்தை, போக்குக - நீக்குக,
நோக்குவது      - பார்க்கவேண்டியது, ஏதெனில் - என்னவென்றால்,
ஞானம் -