(இ-ள்.) காணா - (இம்முனிவனைப்) பார்த்து, நின்ற -
(வித்துத்தந்தனுக்கு) ஸத்துவத்தில் நின்ற, வேரம் - வைரபாவமானது,
கனற்ற - (அதிகமாக) எரிதலைச் செய்ய (அதாவது : உதயத்தைக்
கொடுக்க), மாணான் - மாட்சிமைக் குணமில்லாத அவன், கடிது -
சீக்கிரமாக, ஓடி - சென்று, மாதவர்கோனை - முனிநாயகனான
சஞ்சயந்தனை, ஏந்தி - தூக்கி, கொடுவந்து - கொண்டுவந்து, சேணாறு
- ஆகாயமார்க்கமாக, ஓடும் - செல்லும், விமானம் - தனது
விமானத்தில், ஏற்றி - வைத்து, வேணார் - மூங்கில்களால் நிறைந்த,
வெள்ளிமலையின் - விஜயார்த்த பர்வதத்தின், கீழ் - தாழ்வரையில்,
இவட்பரதத்து - இவ்விடத்திலுள்ள பரதக்ஷேத்திரத்தில், செல்க -
செல்வாயாக, என்றான் - என்று அதனைச் செலுத்தினான்,
எ-று. (9)
150. வந்தான் குமுதா வதியு மரிநற் சுவணம் பொற்
கந்தார் கயமும் வதிபின் வைத்த நதிமூன்றும்
சந்தார் சண்ட வேகையு மாய நாமத்தின்
ஐந்தா றுஞ்சென் றொன்றார் தடத்தி னடுவாக.
(இ-ள்.) குமுதாவதியும் - குமுதவதியும், அரி - ஹரியும், நல் -
நன்மையாகிய, சுவணம் - ஸ்வர்ணமும், பொன் - அழகிய, கந்து -
கல்ஸ்தம்பங்களில், ஆர் - கட்டும்படியான, கயமும் - கஜமும் என்கிற
மூன்றிலும்,வதி - வதியென்கின்ற சப்தத்தை, பின்வைத்த - பின்னாலே
வைக்கப்பட்ட, நதிமூன்றும் - ஹரிவதி ஸ்வர்ணவதி கஜவதி
யென்கின்ற மூன்று நதிகளும், சந்து - சந்தன மரங்களால், ஆர் -
நிறைந்த, சண்டவேகையும் - சண்டவேகையென்கிற ஆறும், ஆகிய,
நாமத்தின் - இப்பெயர்களையுடைய, ஐந்தாறும் - இந்த ஐந்து
நதிகளும், சென்று - போய், ஒன்றாம் - ஒன்றாகச்சேரப்பட்ட,
தடத்தின் - விசாலமாகிய இடத்தினுடைய, நடுவாக - மத்தியத்தில்,
வந்தான் - வந்து சேர்ந்தான், எ-று. (10)
151. சிந்தை முறுக்கி விமானஞ் செல்லா வகைநோக்கி
அந்தத் தடத்தி னடுவே முனியை யவனிட்டு
முன்செய் வினையா லவனம் முனியை முறுக்கினான்
முன்செய் வினையின் மேலே முனியு முறுகின்றான்.
(இ-ள்.)சிந்தை - மனதில், முறுக்கி - பலஞ்செய்து செலுத்தியும்,
விமானம் - தனது விமானமானது, செல்லாவகை - அதற்குமேல்
போகாத விதாயத்தை, நோக்கி - பார்த்து, அந்தத் தடத்தின் -
அவ்விடத்தின், நடுவே - மத்தியத்தில், முனியை - சஞ்சயந்த
முனியை, அவன் - அவ்வித்துத்தந்தன், இட்டு - தள்ளிவிட்டு,
முன்செய் - பூர்வத்தில் தன்னாற் பண்ணப்பட்ட, வினையால் - பாப |