78மேருமந்தர புராணம்  


 

தீயினன்    -     அக்கினியையுடைய    வித்துத்தந்தன், விரைந்து -
சீக்கிரமாக, மாரி   போல்   -   மழைபெய்வதுபோல,    பலமலை -
பலமலைகளை,  எடுத்து  -  தூக்கி, எறிந்தனன் - எறிந்தான், எறிய -
அப்படி   யெறியவும்,    வீரன்   -  சஞ்சயந்தமுனி, மேற்செல்லும் -
வித்துத்தந்தன் மேலே செல்லும், வெகுளியை - கோபத்தை, விலக்கி -
இல்லாமல்  நீக்கி   க்ஷமைகொண்டு, பன்னூறு வாரம் - இப்படிப் பல
நூறு    தடவை,   சென்றபின்   -   சென்றபிற்பாடு,  பமத்தினை -
பிரமத்தகுணஸ்தானமாகும் தன்மையை, பறித்து - நீக்கி, எறிந்திட்டான்
- தள்ளினான் (அதாவது : அப்பிரமத்த குணஸ்தானத்தை யேறினான்),
எ-று.                                                  (22)

 163. விண் புதைக்கவெஞ் சரமவன் பொழிந்தனன் விண்ணோர்
     கண் புதைத்துமெய்ம் மயங்கினர் முனிவனு மறிவன்
     பண்பு மெய்த்தவர் தன்மையு நூலையும் பார்க்குங்
     கண்பு தைக்குமோ ரெழுவரை யக்கணத் தழித்தான்.

     (இ-ள்.)   அவன் -   அவ்வித்துத்தந்தன்,  (மேலும்)  வெம் -
வெப்பம்பொருந்திய, சரம் - பாணங்களை, விண்புதைக்க -ஆகாயமும்
மறையும்படியாக,   பொழிந்தனன்   -    சொரிந்தான், விண்ணோர் -
தேவர்கள்,    கண்புதைத்து     -   கண்ணை      மூடிக்கொண்டு,
மெய்ம்மயங்கினர்   -    தேகத்தில்    பிர்மித்தார்கள், முனிவனும் -
சஞ்சயந்தமுனியும்,   அறிவன்  - அருகத் பரமேஸ்வரனது, பண்பும் -
குணமும், மெய்த்தவர் - மஹா  முனிகளாகிய சாதுக்களது, தன்மையும்
- குணமும்,   நூலையும்  -   பரமாகமத்தையும் (இந்த ஆப்த ஆகம
குருக்களென்னும்    மூன்றினுடைய     தன்மையையும்), பார்க்கும் -
பார்க்கும்படி யான,   கண் -   தரிசனத்தை, புதைக்கும் - மறைக்கும்,
ஓரெழுவரை -   சப்தபிரகிருதிகளை, அக்கணத்து -  அத்தருணத்தில்
அந்த   அப்பிரமத்த   குணஸ்தானத்திலே    நின்று,  அழித்தான் -
கெடுத்தான் (அதாவது : வராமல் விலக்கிவிட்டான்), எ-று.

இதனால் சுத்தாத்ம தியானம் நிலைத்த தென்பது பெறப்படும்.     (23)

 164. கவ்வை நூற்றுட னெரிகனல் கடுகினன் கடுக
     வெவ்வந் தீர்முனி வினைகளை யழிப்பனென் றெண்ணா
     பவ்வ நூறுநூ றாம்வினைப் பகைநிலை தளர்த்தான்
     புவ்வி யோடுநின் றணியட்டி தன்னையும் புணர்ந்தான்.

     (இ-ள்.) எரிகனல் -    எரிகின்ற   அக்கினிபோன்ற, நூற்று -
நூற்றுக்கணக்காகிய,   கவ்வை   -  துன்பங்களை, உடன் - உடனே,
(அவ்வித்துந்தந்தன்)   கடுகினன்   - சீக்கிரமாகச் செய்தான், கடுக -
அவ்வாறு சீக்கிரமாகச்  செய்ய,  எவ்வந்தீர் - குற்றம் நீங்கிய, முனி -
முனிவரனும், வினைகளை -   கருமங்களை, அழிப்பனென்று - கெடுப்