அந்தராயம் ஐந்தாவன :- தானாந்தராயம், லாபாந்தராயம்,
போகாந்தராயம், உபபோகாந்தராயம், வீரியாந்தராயம் என்பனவாம்.
மற்று - அசை. (29)
வேறு.
170. காதி நாலர சழிந்தன வழிதலுங்
கைவல வொரு நான்மை
போதி யாதிகள் புணர்ந்தன புணர்தலும்
புகழ்ந்துல கொருமூன்றும்
சோதி மாமலர் சொரிந்துவந் தடைந்தன
ரடைதலுந் துயரெய்தித்
தீது செய்தவன் றிகைத்தனன் றிகைத்திடா
நிலத்திடைப் போய் வீழ்ந்தான்.
(இ-ள்.) காதி - காதிகர்மங்களாகிற, நாலு - (ஞானாவரணீய
தரிசனாவரணீய மோஹநீய அந்தராய மென்னும்) நாலுவிதமாகிய,
அரசு - கர்மராஜ்யங்கள், அழிந்தன- இவ்வாறு கெட்டன, அழிதலும் -
இப்படிக்கெடவும், கைவல - கைவல்லியமாகிற, ஒரு - ஒப்பற்ற,
போதியாதிகள் - ஞான முதலாகிய, நான்மை - (அனந்த ஞான
அனந்த தரிசன அனந்த ஸுஹ அனந்த வீரியமென்னும்) அனந்த
சதுஷ்டயங்கள், புணர்ந்தன - சேர்ந்தன, புணர்தலும் - அங்ஙனம்
சேர்தலும், புகழ்ந்து - புகழ்ந்து, உலகு ஒரு மூன்றும் -
மூன்றுலகத்திலுமுள்ள தேவர்கள், சோதி - பிரகாசமாகிய, மாமலர் -
மிகுதியாகிய புஷ்பங்களை, சொரிந்து - பொழிந்து, வந்தடைந்தனர் -
வந்து சேர்ந்தார்கள், அடைதலும் - அங்ஙனம் சேர்தலும்,
தீதுசெய்தவன் - பொல்லாங்குசெய்த வித்துத் தந்தன், துயரெய்தி -
துன்பமடைந்து, திகைத்தனன் - பிரமித்தான், திகைத்திடா -அவ்வாறு
பிரம்மித்து, (பின்பு), போய் - கொஞ்ச தூரத்தில் போய், நிலத்திடை -
பூமியின் மேல், வீழ்ந்தான் - வீழ்ந்து கிடந்தான், எ-று. (30)
வேறு.
171. பகலவ னெழுச்சியிற் பவணர் தோன்றினார்
இகலிடத் தவர்களெண் டிசையு மீண்டினார்
முகைமலர் சொரிந்துமே லவர்கண் மூடினார்
இகலொறுத் தவன்செப்பின் மணியை யொத்தனன்.
(இ-ள்.) பகலவன் - சூரியனுடைய, எழுச்சியில் - உதயம்போல்,
பவணர் - பவணதேவர்கள், தோன்றினார் - கீழ்நின்றும் வந்தார்கள், இகலிடத்தவர்கள் - |