|  
       இம்     மத்திம   லோகத்திலிராநின்ற  வியந்தரஜோதிஷ்கதேவர்கள், 
        எண்டிசையும் - எட்டுத்திக்குகளிலும், ஈண்டினார் - நெருங்கினார்கள், 
        முகை - கூட்டமாக,  மலர் - புஷ்பங்களை,   சொரிந்து - பொழிந்து, 
        மேலவர்கள் -  கல்பவாஸிதேவர்கள், மூடினார் - வந்து மூடினார்கள், 
        இகல் -  கருமங்களின்   பராக்கிரமத்தை, ஒறுத்தவன் - தண்டித்துக் 
        குறைத்து    நீக்கின    சஞ்சயந்த பட்டாரகன், செப்பின்மணியை - 
        செப்புக்குள்ளிராநின்ற    இரத்தினத்தை,   ஒத்தனன் - நிகர்த்தான், 
        எ-று.                                                							(31)   
      வேறு.     
      172.	தாம நான்றன சந்தன மெழுகின சருபலத் தான்வந்த 
            தூம மார்ந்தன சுடர்விளக் கெரிந்தன சொரிந்தன மலர்மாரி 
            வாம வாரியின் வால்வளை யரிசியின் மங்கையர் நடமுன்னாக் 
            காம வேளைவென் றிருந்தவன் றிருந்தடி பணிந்துடன றுதிசெய்தார்.	 
           (இ-ள்.)  (அவர்களெல்லோரும்  வந்து கூடியபின்   சஞ்சயந்த 
        பட்டாரகர்     இருந்த       ஸ்தானத்தில்)       தாமம்நான்றன - 
        (மேலிடங்களெல்லாம்)       பூமாலை     முதலிய       மாலைகள் 
        தொங்கவிடப்பட்டன,    சந்தனம்   - சந்தனக்குழம்பால், மெழுகின - 
        கீழிடங்களெல்லாம்     மெழுகப்பட்டன,   சரு - (தேவநிர்மிதமாகிய 
        அல்லது நிர்மாபணமாகிய)     பலகாரவகைகளோடும்,   பலத்தான் - 
        பழவகைகளோடும்,  வந்த  - வரப்பட்ட, தூமம் - அகில்தூபங்களும், 
        ஆர்ந்தன - நிறைந்தன,  சுடர் - பிரகாசியாநின்ற, விளக்கு - இரத்தின 
        தீபம் முதலியவைகளும்,    எரிந்தன -     பிரகாசித்தன, மலர்மாரி - 
        புஷ்பவருஷங்கள்,     சொரிந்தன   - பொழியப்பட்டன, வாரியின் - 
        ஸமுத்திரத்திலுண்கிய,    வாமம் -    அழகிய,     வளை - சங்கின் 
        வர்ணம்போல், வால் - வெளுப்பாகிய,    அரிசியின்   -   அக்ஷதை 
        அரிசிகளையுடைய    (அதாவது :   அக்ஷதைகளால் அர்ச்சிக்கின்ற), 
        மங்கையர் - தேவரம்பையரின், நடம்முன்னா - நர்த்தனத்துக்கெதிரில், 
        காமவேளை - மன்மதனை    (அதாவது :   மோஹநீய கருமத்தை), 
        வென்று - ஜெயித்து,    இருந்தவன்    -  இராநின்ற வீதராகனாகிய 
        சஞ்சயந்த பட்டாரகனுடைய,    திருந்து     - திருத்தமாகிய, அடி - 
        பாதங்களை,பணிந்து -வணங்கி, உடன் -ஒரு தன்மையாக (அதாவது : 
        ஒற்றுமையாக),   துதி - ஸ்தோத்திரங்களை, செய்தார் - (எல்லோரும் 
        கீழ்வருமாறு) செய்தார்கள், எ-று.  
           "வாமவாரியின்   வால்வளை  யரியினமங்கையர்   நடமுன்னா" 
        எனக்கொண்டு  "வெள்ளிய சங்கு  வளையலையும் பாதச்சிலம்புகளையு 
        மணிந்த மங்கையர் நடனத்தின்  முன்பாக" என்று பொருள்கொள்ளினு 
        மமையும்.										                                              (32)	 
       173.	விதிக ணான்கையுங் கடந்தனை யடைந்தனை 
                    விகலமி லொரு நான்மை  |