இம் மத்திம லோகத்திலிராநின்ற வியந்தரஜோதிஷ்கதேவர்கள்,
எண்டிசையும் - எட்டுத்திக்குகளிலும், ஈண்டினார் - நெருங்கினார்கள்,
முகை - கூட்டமாக, மலர் - புஷ்பங்களை, சொரிந்து - பொழிந்து,
மேலவர்கள் - கல்பவாஸிதேவர்கள், மூடினார் - வந்து மூடினார்கள்,
இகல் - கருமங்களின் பராக்கிரமத்தை, ஒறுத்தவன் - தண்டித்துக்
குறைத்து நீக்கின சஞ்சயந்த பட்டாரகன், செப்பின்மணியை -
செப்புக்குள்ளிராநின்ற இரத்தினத்தை, ஒத்தனன் - நிகர்த்தான்,
எ-று. (31)
வேறு.
172. தாம நான்றன சந்தன மெழுகின சருபலத் தான்வந்த
தூம மார்ந்தன சுடர்விளக் கெரிந்தன சொரிந்தன மலர்மாரி
வாம வாரியின் வால்வளை யரிசியின் மங்கையர் நடமுன்னாக்
காம வேளைவென் றிருந்தவன் றிருந்தடி பணிந்துடன றுதிசெய்தார்.
(இ-ள்.) (அவர்களெல்லோரும் வந்து கூடியபின் சஞ்சயந்த
பட்டாரகர் இருந்த ஸ்தானத்தில்) தாமம்நான்றன -
(மேலிடங்களெல்லாம்) பூமாலை முதலிய மாலைகள்
தொங்கவிடப்பட்டன, சந்தனம் - சந்தனக்குழம்பால், மெழுகின -
கீழிடங்களெல்லாம் மெழுகப்பட்டன, சரு - (தேவநிர்மிதமாகிய
அல்லது நிர்மாபணமாகிய) பலகாரவகைகளோடும், பலத்தான் -
பழவகைகளோடும், வந்த - வரப்பட்ட, தூமம் - அகில்தூபங்களும்,
ஆர்ந்தன - நிறைந்தன, சுடர் - பிரகாசியாநின்ற, விளக்கு - இரத்தின
தீபம் முதலியவைகளும், எரிந்தன - பிரகாசித்தன, மலர்மாரி -
புஷ்பவருஷங்கள், சொரிந்தன - பொழியப்பட்டன, வாரியின் -
ஸமுத்திரத்திலுண்கிய, வாமம் - அழகிய, வளை - சங்கின்
வர்ணம்போல், வால் - வெளுப்பாகிய, அரிசியின் - அக்ஷதை
அரிசிகளையுடைய (அதாவது : அக்ஷதைகளால் அர்ச்சிக்கின்ற),
மங்கையர் - தேவரம்பையரின், நடம்முன்னா - நர்த்தனத்துக்கெதிரில்,
காமவேளை - மன்மதனை (அதாவது : மோஹநீய கருமத்தை),
வென்று - ஜெயித்து, இருந்தவன் - இராநின்ற வீதராகனாகிய
சஞ்சயந்த பட்டாரகனுடைய, திருந்து - திருத்தமாகிய, அடி -
பாதங்களை,பணிந்து -வணங்கி, உடன் -ஒரு தன்மையாக (அதாவது :
ஒற்றுமையாக), துதி - ஸ்தோத்திரங்களை, செய்தார் - (எல்லோரும்
கீழ்வருமாறு) செய்தார்கள், எ-று.
"வாமவாரியின் வால்வளை யரியினமங்கையர் நடமுன்னா"
எனக்கொண்டு "வெள்ளிய சங்கு வளையலையும் பாதச்சிலம்புகளையு
மணிந்த மங்கையர் நடனத்தின் முன்பாக" என்று பொருள்கொள்ளினு
மமையும். (32)
173. விதிக ணான்கையுங் கடந்தனை யடைந்தனை
விகலமி லொரு நான்மை |