மதிக ணான்கையுங் கடந்தனை யடைந்தனை
யுலகெலா மதி யொன்றிற்
கதிக ணான்கையுங் கடந்தனை யடைந்தனை
யகதியைக் கதி யின்றித்
துதிக ணான்கையுங் கடந்ததோர் துறவுடைச்
சுகதவெம் பெருமானே.
(இ-ள்.)விதிகள் நான்கையும் - காதிசதுஷ்டயங்களை,கடந்தனை
- தாண்டினாய், விகலமில் - குற்றமில்லாத, ஒரு - ஒப்பற்ற, நான்மை -
அனந்த சதுஷ்டயத்தை, அடைந்தனை - அடைந்தாய், மதிகள்
நான்கையும் - (மதி, சுருத, அவதி, மனப்பரிய மென்னும்)
நான்குஞானங்களையும், கடந்தனை - தாண்டினாய், உலகு எலாம் -
லோகாலோக சமஸ்தங்களையும், மதியொன்றில் -
கேவலஞ்ஞானமொன்றினால், அடைந்தனை - அடைந்தாய்,
கதிகணான்கையும் - சதுர்க்கதிகளையும், கடந்தனை - தாண்டினாய்,
அகதியை - மோட்ச கதியை, கதியின்றி - அதற்கு மேல்
கதியில்லாமல், அடைந்தனை - சேர்ந்தாய், துதிகள்நான்கையும் -
(அரகந்தசித்த ஸாது தர்மமென்கிற) சதுஸ்திகளையும், கடந்தது -
தாண்டியதாகிய, ஓர் - ஒப்பற்ற, துறவுடை -
பரத்திரவியாபேட்சையினீங்கின சுத்தாத்துமதியானமான, சுகத -
ஸௌக்கியமுடைய, எம்பெருமானே - எங்கள் தலைவனே, எ-று. (33)
174. உலக மூன்றையு மேந்திடு மாற்றலை யொருகணத துலகத்தின்
அலகி னீளமு மகலமு முயரமு மணுவினா லளக்கிற்கும்
இலகு தன்மையை யியல்பிலெவ் வுயிர்களு மியற்றுமத் தொழில் செய்து
விலகி நின்றிடும் விசித்திரக் கிரியைநல் வீரிய விறல்வேந்தே.
(இ-ள்.) உலக மூன்றையும் - மூவுலங்களையும், ஏந்திடும் -
தரித்திராநின்ற, ஆற்றலை -ஞானசக்தியையுடையயாய்!, ஒருகணத்து -
ஒரு ஸமயத்தில், உலகத்தின் - உலகத்தினுடைய, அலகில் -
கணக்கில்லாத, நீளமும் - நீளத்தையும், அகலமும் - அகலத்தையும்,
உயரமும், உன்னதத்தையும், அணுவினால் - பரமாணுவினாலே,
அளக்கிற்கும் - அளக்கும்படியான, இலகும் - விளங்காநின்ற,
தன்மையை - ஸ்வபாவமுடையாய்!, இயல்பில் - ஸ்வபாவகுணமாகிய
ஞான தரிசனத்தினது முடிவில்லாத விருத்தியினால், எவ்வுயிர்களும் -
ஸகல ஜீவன்களும், இயற்றும் - செய்கின்ற, அத்தொழில் - அந்தக்
காரியங்களை, செய்து - பரமாக மத்தினால் சகலருக்கும்
தெரியச்செய்து, விலகிநின்றிடும் - ஒன்றிலும் பற்றாமல் நீங்கிநிற்கும்,
விசித்திரக்கிரியை - ஆச்சரியமாகிய கிரியையையுடையாய், நல் -
நன்மையாகிய, வீரிய - அனந்தவீரியமாகிய, விறல் -
பராக்கிரமத்தையுடைய, வேந்தே - நாதனே, எ-று. (34) |