|  
        175.	மறைகள் மாய்ந்திட வான்பொறி யைந்தையு 
                 மாற்றிமற் றவற்றா லாம் 
             முறையு நீங்கமூ வுலகினோ டலோகின்முக் 
                 காலத்தி னிகழ்வெல்லாம் 
             உறலு மோர்தலு மின்றியே யோர்கணத் 
                 தொற்றுமை முதலாய 
             அறியு நின்னறி வறிவதோ ரறிவெமக் 
               கருள்செயெம் பெருமானே. 
	       (இ-ள்.)மறைகள் - ஸ்வபாவகுணங்களை மறைக்கும் ஆவரணிய 
	    கருமங்கள், மாய்ந்திட - நீங்க, வான் - பெரிதாகிய, பொறியைந்தையும் 
	    - பஞ்சேந்திரியங்களையும், மாற்றி - விஷயங்களிற்செல்லாமல் தடுத்து, 
	    மற்று - பின்னை,  அவற்றால்   -  அவ்விந்திரியங்களால்,   ஆம் - 
	    ஆகின்ற, முறையும் -  கிரமமும், நீங்க - நீங்கிவிட, மூவுலகினோடு - 
	    மூன்றுலகங்களோடு,    அலோகின்    -    அலோகத்தினுடையவும், 
	    முக்காலத்தின் -     பூத     பவிஷ்ய    வர்த்தமான    மென்னும் 
	    திரிகாலங்களினுடையவும்,   நிகழ்வெல்லாம் - நிகழ்ச்சிகளையெல்லாம், 
	    உறலும் - அடைதலும், ஓர்தலும் - நினைத்தலும், இன்றி - இல்லாமல், 
	    ஓர் கணத்து -    ஒரு   ஸமயத்தில், ஒற்றுமை முதலாய - ஸாமான்ய 
	    முதலாகிய    எல்லா    விசேஷங்களையும்,    அறியும் - அறிகின்ற 
	    (கேவலஞானமாகிய),    நின்னறிவு  -  உனது  ஸ்வபாவ ஞானமானது, 
	    அறிவது - ஸகலத்தையும்  அறியும்படியான,  ஓர் -ஒப்பற்ற, அறிவு - 
	    திவ்வியஞானமாகும்,    எம்பெருமானே   -   எங்கள் தலைவனாகிய 
	    ஸ்வாமியே!,    எமக்கு -    எங்களுக்கு,     அருள்      செய் - 
	    ஸ்வபாவகுணமாகிய   அந்தச்    சுத்த  ஞானத்தைப் பெறும்படியாக 
	    உபதேசம் பண்ணியருள்வாயாக, எ-று.				                     (35)
	   176. பொறிக ளாறிலைம் புலத்தினாற் கதியின்முக் காலத் திருபோகத் 
	        துறவியாவையு முற்றவின்பத்தினோடுனதின பந்தனையொப்பித் 
	        தறியின் மற்றவை யணுவுமா காயமு மனையவுன் பேரின்பத் 
	        துறைதி யுன்னைநீ யுன்னுளே யனுபவித் துலகவுத் தமனீயே.
          (இ-ள்.) பொறிகள் ஆறில் - ஷடிந்திரியங்களில்,ஐம்புலத்தின் - 
      பஞ்ச  விஷயங்களில்,  நாற்கதியின்  - சதுர்க்கதிகளில்,முக்காலத்து - 
    மூன்று   காலங்களில்,  இருபோகத்து   -  போகோப போகங்களில், 
    உறவியாவையும்  -  (அநுபவியாநின்ற)  ஸகல ஜீவன்களும், உற்ற - 
    அடைந்த,   இன்பத்தினோடு    -    சௌக்கியத்தினோடு, உனது - 
    உன்னுடைய,   இன்பந்தன்னை - சௌக்கியத்தை, ஒப்பித்து - ஒன்று 
    சேர்த்து, அறியின் -  தெரியுமிடத்தில்,   மற்றவை - (ஸகலஸம்ஸாரப் 
    பிராணிகளுடைய) ஸுஹங்கள், அணுவும் - அணுவையும், ஆகாயமும் 
    - ஆகாயத்தையும்,  அனைய - நிகர்ப்பனவாம், (இத்தகைய)  உன் - 
    உனது,  |