|  
       சரணமுன் சரண மென்னாச் சார்ந்தனர் பலருஞ் சோர்ந்தார் 
        கரணந்தம் புலங்கள் காணார் கைதொழு திறைஞ்சி மாதோ. 
	      (இ-ள்.) தரணன்றன் - தரணேந்திரனது, கோபம் - கோபத்தை, 
	   காணா - பார்த்து, தானவர் - வித்தியாதரர்களில், தலைவர்  எல்லாம் - 
	   தலைமை பெற்றவர்களெல்லாம்,     இன்று   - இப்போது, மரணம் - 
	   மரணமானது, எய்திற்று -   வந்தது, என்னா  -  என்று,  மயங்கிய - 
	   பிரமித்த,     மனத்தராகி -      மனதுடையவர்களாகி,    கரணம் - 
	   (தப்பித்துக்கொள்ளும்) செய்கையை, தம் -  தங்களுடைய, புலங்கள் - 
	   விஷயங்களில்,  காணார் - (வேறொருவகையிலும்)  அறியாதவர்களாகி, 
	   கைதொழுது - கைகூப்பி, இறைஞ்சி, வணங்கி, உன் சரணம் - (வாராய் 
	   தரணேந்திரனே)   உனது    பாதம், சரணம் - (எங்களுக்கு) ரக்ஷணை, 
	   என்னா -  என்று   சார்ந்தனர்   - அடைக்கலமானார்கள், பலரும் - 
	   அவர்களைச்  சேர்ந்த    வேறு    பல பேர்களும்,    சோர்ந்தார் - 
      சோர்வுற்றார்கள், எ-று.								                                   (41) 
	 182.	மின்னொத்த தந்தத் திந்தப் பாவிதான் விதேயத் தின்று 
	       முன்னைத்தன் பாவத் தாலே முனிவனைக் கொண்டு வந்து 
	       கன்மொய்த்த திணிதிண் டோளாய் கயத்திடை யிட்டு நம்மைத் 
          தின்னத்தா னரக்கன் வந்தா னின்றெனச் செப்ப லோடும். 
	      (இ-ள்.)   மின்னொத்த   -   மின்னலைப்போன்ற, தந்தத்து - 
	   பற்களையுடைய,  இந்தப்பாவிதான்  -   இந்தப்  பாபிஷ்டனாகியவன், 
	   முன்னை - பூர்வத்தில் செய்யப்பட்ட, தன் - தன்னுடைய, பாவத்தாலே 
	   - பாபகருமோதயத்தாலே, இன்று  - இப்போது, விதேயத்து - விதேஹ 
	   க்ஷேத்திரத்தினின்றும்,   முனிவனை -   இச்  சஞ்சயந்த பட்டாரகரை, 
	   கொண்டுவந்து -   தனது    விமானத்தில்  தூக்கிக் கொண்டு வந்து, 
	   கண்மொய்த்த -  கல்லைப்போன்ற,  திணி   -  கெட்டியாகிய,  திண் 
	   தோளாய் -  வலிமைபெற்ற  புயத்தை யுடையவராகிய தரணேந்திரரே, 
	   கயத்திடை -  இந்தத்  தடாகத்தினிடத்திலே,   இட்டு  - தள்ளிவிட்டு, 
	   நம்மை -   நம்மெல்லாரையும்,   தின்னத்தான் -    தின்னும்படியாக, 
	   அரக்கன்   -    ஓரிராக்கதன்,   இன்று  - இப்பொழுது, வந்தான் - 
	   இவ்விடத்தில் வந்திருக்கிறான், என - என்று, செப்பலோடும் - அவன் 
      சொல்லவும், எ-று.					                                      (42) 
	 183.	அறிவிலான் சொல்லை மெய்யென் றஞ்சினோ மடையக் கூடி 
	       மறுவிலான் றவத்தின் றன்மைப் பயத்தைநா மதிக்க மாட்டாச் 
	       சிறியர்யாஞ் செய்த தீமை பெரியைநீ பொறுக்கல் வேண்டு 
	       மிறைவனே யெடுத்துக் காட்டா மென்றவர் பணிந்து நின்றார். 
	      (இ-ள்.)   அறிவிலான் -  புத்தியில்லாதவனுடைய, சொல்லை - 
    வசனத்தை,  மெய்யென்று  -   உண்மைதானென்று,  அஞ்சினோம் - 
    பயந்தவர்களாகி, அடைய -  |