முழுமையும், கூடி - சேர்ந்து, மறுவிலான் - களங்கமில்லாத
முனிவரனது, தவத்தின்தன்மை - தபஸினுடைய மேலான குணத்தினது,
பயத்தை - பலனை, நாம் - நாங்கள், மதிக்கமாட்டா - மதித்தறிய
முடியாத, சிறியர் - அற்பர்கள், யாம் - அத்தகைய நாங்கள், செய்த -
இயற்றிய, தீமை - பொல்லாங்குகளை, பெரியை - பெரியோனாகிய, நீ
- நீ, பொறுக்கல் வேண்டும் - க்ஷமைபண்ணி யருளவேண்டும்,
இறைவனே - இச்சஞ்சயந்த பகவானே, எடுத்துக் காட்டாம் -
எங்களால் செய்யப்பட்ட தீமைகளைப்பொறுத்து உயர்ந்ததற்குத்
திருஷ்டாந்தமா யிராநின்றார், என்று - என்றுசொல்லி, அவர் -
அவ்வித்தியாதரர்கள், பணிந்து - வணங்கி, நின்றார் - நின்றார்கள்,
எ-று. (43)
184. புலியினைக் கண்டு போக்கற் றடைந்தபுல் வாய்கள் போல
மெலியவ ருரைக்க நெஞ்சங் குழைந்துபா சத்தை நீக்கிப்
பலரையும் போக விட்டிப் பாவியைச் சுற்றத் தோடு
மொலிகட லிடுவ னென்னா வுடன்றவ னெழுந்த போழ்தில்.
(இ-ள்.) புலியினை - புலியை, கண்டு - பார்த்து, போக்கற்று -
நீங்கிப்போகச் சக்தியற்று, அடைந்த - அதனிடத்தில் சேர்ந்த,
புல்வாய்கள்போல - மான்கூட்டங்களைப்போல, மெலியவர் -
அற்பர்களாகிய வித்தியாதரர்கள், உரைக்க - தரணேந்திரனிடம்
சொல்லி வேண்டிக்கொள்ள, நெஞ்சம் - மனதானது, குழைந்து -
தளர்ந்து, பாசத்தை - நாகபாசத்தை, நீக்கி - விலக்கி, பலரையும் -
அக்கூட்டத்தாராகிய பல பேர்களையும், போகவிட்டு - அனுப்பிவிட்டு,
இப்பாவியை - இந்த வித்துத்தந்தனை, சுற்றத்தோடு - இவனது
நெருங்கிய பந்துக்களுடன், ஒலி - அலைகளால் சப்தியாநின்ற, கடல் -
ஸமுத்திரத்தில், இடுவன் - போடுவேன், என்னா - என்று, உடன்று -
கோபித்து, அவன் - அத்தரணேந்திரன், எழுந்த போழ்தில் -
உத்தேசித்தெழுந்த காலத்தில், எ-று. (44)
185. நீதிதா னத்தி னாலெண் வினைகளை வென்ற வீரன்
பாததா மரைக ளேத்திப் பரிவிண்ணக் கிரியை முற்றி
ஆதிதா பத்து நாமத் தமரனின் றவனை நோக்கிக்
கோபதா பத்தை நீக்கிக் குணங்கொளக் கூறலுற்றான்.
(இ-ள்.) நீதிதானத்தினால் - வரிசைக்கிரமத்தினால், எண்
வினைகளை - அஷ்ட கருமங்களையும், வென்ற - ஜெயித்திராநின்ற,
வீரன் - சஞ்சயந்தபட்டாரகருடைய, பாததாமரைகள் -
பாதகமலங்களை, ஏத்தி - ஸ்தோத்திரம்பண்ணி, பரிவிண்ணக்கிரியை -
பரிநிர்வாண பூஜையை, முற்றி - செய்து முடித்து, ஆதிதாபத்து நாமத்து
- ஆதித்யாபனென்னும் பெயரையுடைய, அமரன் - கல்ப
வாஸிதேவன், நின்றவனை - இப்படிக் கோபித் தெழுந்துநின்ற
தரணேந்திரனை, |