|  
       முழுமையும்,   கூடி   -   சேர்ந்து,   மறுவிலான் -  களங்கமில்லாத 
        முனிவரனது,  தவத்தின்தன்மை - தபஸினுடைய மேலான குணத்தினது, 
        பயத்தை -  பலனை,   நாம் -  நாங்கள், மதிக்கமாட்டா - மதித்தறிய 
        முடியாத, சிறியர் - அற்பர்கள், யாம் - அத்தகைய நாங்கள், செய்த - 
        இயற்றிய,  தீமை - பொல்லாங்குகளை, பெரியை - பெரியோனாகிய, நீ 
        - நீ,   பொறுக்கல்    வேண்டும்   - க்ஷமைபண்ணி யருளவேண்டும், 
        இறைவனே  -  இச்சஞ்சயந்த   பகவானே,   எடுத்துக்  காட்டாம் - 
        எங்களால்   செய்யப்பட்ட   தீமைகளைப்பொறுத்து   உயர்ந்ததற்குத் 
        திருஷ்டாந்தமா   யிராநின்றார்,    என்று -  என்றுசொல்லி, அவர் - 
        அவ்வித்தியாதரர்கள்,  பணிந்து -  வணங்கி,  நின்றார் - நின்றார்கள், 
      எ-று.	                                                 (43) 
	  184.	புலியினைக் கண்டு போக்கற் றடைந்தபுல் வாய்கள் போல 
	        மெலியவ ருரைக்க நெஞ்சங் குழைந்துபா சத்தை நீக்கிப் 
	        பலரையும் போக விட்டிப் பாவியைச் சுற்றத் தோடு 
	        மொலிகட லிடுவ னென்னா வுடன்றவ னெழுந்த போழ்தில். 
	       (இ-ள்.)  புலியினை - புலியை, கண்டு - பார்த்து, போக்கற்று - 
	    நீங்கிப்போகச்  சக்தியற்று,   அடைந்த   -  அதனிடத்தில்  சேர்ந்த, 
	    புல்வாய்கள்போல     -   மான்கூட்டங்களைப்போல,   மெலியவர் - 
	    அற்பர்களாகிய   வித்தியாதரர்கள்,   உரைக்க  -  தரணேந்திரனிடம் 
	    சொல்லி   வேண்டிக்கொள்ள,   நெஞ்சம்  - மனதானது, குழைந்து - 
	    தளர்ந்து,  பாசத்தை -  நாகபாசத்தை,  நீக்கி - விலக்கி, பலரையும் - 
	    அக்கூட்டத்தாராகிய பல பேர்களையும், போகவிட்டு - அனுப்பிவிட்டு, 
	    இப்பாவியை -  இந்த  வித்துத்தந்தனை,   சுற்றத்தோடு -   இவனது 
	    நெருங்கிய பந்துக்களுடன், ஒலி - அலைகளால் சப்தியாநின்ற, கடல் - 
	    ஸமுத்திரத்தில்,  இடுவன் - போடுவேன், என்னா - என்று, உடன்று - 
	    கோபித்து,   அவன் -   அத்தரணேந்திரன்,  எழுந்த   போழ்தில் - 
      உத்தேசித்தெழுந்த காலத்தில், எ-று.                       						(44) 
	  185.	நீதிதா னத்தி னாலெண் வினைகளை வென்ற வீரன் 
	        பாததா மரைக ளேத்திப் பரிவிண்ணக் கிரியை முற்றி 
	        ஆதிதா பத்து நாமத் தமரனின் றவனை நோக்கிக் 
	        கோபதா பத்தை நீக்கிக் குணங்கொளக் கூறலுற்றான். 
	       (இ-ள்.) 	  நீதிதானத்தினால்  -  வரிசைக்கிரமத்தினால்,  எண் 
    வினைகளை -  அஷ்ட கருமங்களையும், வென்ற  - ஜெயித்திராநின்ற, 
    வீரன்  -    சஞ்சயந்தபட்டாரகருடைய,          பாததாமரைகள் - 
    பாதகமலங்களை, ஏத்தி - ஸ்தோத்திரம்பண்ணி, பரிவிண்ணக்கிரியை - 
    பரிநிர்வாண பூஜையை, முற்றி - செய்து முடித்து, ஆதிதாபத்து நாமத்து 
    -  ஆதித்யாபனென்னும்    பெயரையுடைய,     அமரன் -    கல்ப 
    வாஸிதேவன்,     நின்றவனை   - இப்படிக்  கோபித் தெழுந்துநின்ற 
    தரணேந்திரனை,  |