நோக்கி - பார்த்து, கோபதாபத்தை - கோபவெப்பத்தை, நீக்கி -
விலக்கி, குணங்கொள - குணத்தையடையும்படியாக, கூறலுற்றான் -
சொன்னான், எ-று. (45)
186. இவன்செய்த குற்ற மென்கொ லெருதுபோ லிருந்த வேழை
இவன்செய்த போழ்திற் சால வருள்செய வேண்டு மன்றி
இவன்றன்னை யனையா ருன்றன் கோபத்துக் கிடமு மல்லர்
உவந்தின்ன மொன்று கேளா யுரைக்கின்றே னுரகர் கோவே.
(இ-ள்.) உரகர்கோவே - வாராய ் தரணேந்திரனே!, இவன் -
இவனால், செய்த - செய்யப்பட்ட, குற்றம் - தப்பிதம், என்கொல் -
என்ன, எருதுபோல் - விருஷபத்தைப்போல், இருந்த - இராநின்ற,
ஏழை - அஞ்ஞானியாகும், இவன் - இப்படிப்பட்டவன்,
செய்தபோழ்தில் - (தப்பிதம்) செய்தகாலத்தில், சால - மிகவும்,
அருள்செய்யவேண்டும் - தயவுசெய்யவேண்டும், அன்றி -
அதுவல்லாமலும், இவன் தன்னை யனையார் - இவனுக்குச்
சமானமானவர்கள், உன்தன் - உன்னுடைய, கோபத்துக்கு -
கோபத்திற்கு, இடமுமல்லர் - உரித்தானவர்களல்லர், இன்னமொன்று -
மற்றொரு சமாசாரம், உரைக்கின்றேன் - யான் சொல்லுகின்றேன்,
உவந்து - சந்தோஷித்து, கேளாய் - அதை நீ கேட்பாயாக, எ-று. (46)
187. ஆதிவே தத்து நாதன் புருவிந்த வுலக மேத்த
நீதிமா தவத்தைத் தாங்கி நிறைந்தயோ கத்தி னின்ற
போதினா தரத்தின் வந்தார் போகவா தரத்தி னார்கள்
தீதிலாக் குணத்தி னார்கள் விநமியு நமியு மென்பார்.
(இ-ள்.) ஆதி - முதன்மையாகிய, வேதத்து -
வேதசாஸ்திரத்துக்கு, நாதன் - முதல்வனாகிய, புரு - விருஷப
தீர்த்தங்கரராகிய ஆதிநாதன், இந்தவுலகம் - இந்த வுலகத்திலுள்ள
ஞானிகள், ஏத்த - ஸ்தோத்திரம்செய்ய, நீதி - நீதிவரிசையுடைய,
மாதவத்தை - மஹாதபஸை, தாங்கி - தரித்து, நிறைந்த -
நிறைவுபெற்ற, யோகத்தின் - பிரதிமாயோகத்திலே, நின்றபோதின் -
(காயோத்ஸர்க்கமாக) நின்றகாலத்தில், தீதிலா - பொல்லாங்கில்லாத,
குணத்தினார்கள் - குணத்தையுடையவர்களாகிய, விநமியும்
நமியுமென்பார் - விநமி நமி என்கிற இருவர்கள், போக
வாதரத்தினார்கள் - போகோப போகங்களிலே
பிரியத்தையுடையவர்களாய், ஆதரத்தின் - அப்பிரீதியினாலே, வந்தார்
- அவ்விடத்தில் வந்தார்கள், எ-று. (47)
188. வந்தவ ரிறைவன் பாதம் வலங்கொண்டு வணங்கி வாழ்த்தி
அந்தமி னிதியு நாடு மரசருக் கீந்த வந்நாள்
வந்தில மடிக ளின்றே வந்தன மண் ணெமக்குத்
தந்தபின் னன்றிப் போகோ மென்றுதாழ்ந் தேத்தி னாரே. |