(இ-ள்.) வந்தவர் - வந்த அக்குமாரர்கள், இறைவன் -
நாதனுடைய, பாதம் - பாதங்களை, வலங்கொண்டு - வலம்வந்து,
வணங்கி - நமஸ்கரித்து, வாழ்த்தி - ஸ்தோத்திரம்பண்ணி, அந்தமில் - அளவில்லாத, நிதியும் - ஐஸ்வரியமும், நாடும் - தேசமும், அரசருக்கு
- இராஜர்களுக்கு, ஈந்த அந்நாள் - உம்மால் பகிர்ந்துகொடுத்த
அந்நாளில், வந்திலம் - நாங்கள் வரவில்லை, அடிகள் -ஸ்வாமிகளே!,
இன்றே - இப்பொழுதே, வந்தனம் - வந்தோம், எமக்கு - எங்களுக்கு,
மண் பூமிராஜ்ஜியம் சிறிதாகிலும், தந்தபின்னன்றி - உம்மால்
கொடுக்கப்பட்ட பின்னல்லது,போகோம் - நாங்கள் இவ்விடம் விட்டுப்
போகமாட்டோம், என்று - என்று சொல்லி, தாழ்ந்து - பணிந்து,
ஏத்தினார் - ஸ்தோத்திரம் பண்ணினார்கள், எ-று. (48)
வேறு.
189. மூன்றுலக மேத்தவரு முத்திக் கிளவரசா
யான்ற வணுத்தரத்து ளன்றமர்ந்தாய் நீயே
யான்ற வணுத்தரத்து ளன்றமர்ந்து வந்தாயை
மூன்றுலக மேத்திய வாறுசொல்ல முடியாதே.
(இ-ள்.) மூன்றுலகம் - மூன்றுலோகத்திலுமுள்ள தேவராதியோர்,
ஏத்த - ஸ்தோத்திரம்பண்ண, வரும் - வராநின்ற, முத்திக்கு -
மோக்ஷத்திற்கு, இளவரசா - யௌராஜ பதத்தையுடையவனே!, நீ - நீ,
ஆன்ற - மேலாகிய, அணுத்தரத்துள் - பஞ்சாணுத்தரமென்னும்
அஹமிந்திர வுலகத்தில், அன்று - இதற்குமுன் ஜன்மங்கொண்ட
அக்காலத்தில், அமர்ந்தாய் - பொருந்தினாய், ஆன்ற - மேலான,
அணுத்தரத்துள் - பஞ்சாணுத்தரத்தில், அன்று - அப்போது, அமர்ந்து
- பொருந்தி, வந்தாயை - இப்போது பூமியிலவதரித்த உன்னை,
மூன்றுலகம் - இம்மூவுலகமும், ஏத்தியவாறு - ஸ்துதித்த விதத்தை,
சொல்லமுடியாது - எங்களால் வசனித்தல் முடியாததாகும், எ-று.
ஸ்துதியாவது : ஸ்வர்க்காவதரண, ஜம்மாபிஷேக,
கல்யாணங்களில் தேவர்கள் செய்த ஸ்தோத்திரங்கள். (49)
190. அந்தரமொன் றின்றிவரு முத்திக் கிளவரசா
மந்தரத்தின் மாண்ட சிறப்பமர்ந்தாய் நீயே
மந்தரத்தின் மாண்ட சிறப்பமர்ந்து மண்ணுலகத்
தந்தரத்தை நீக்கு மரசளித்தாய் நீயே.
(இ-ள்.) அந்தரமொன்று - யாதொரு விக்கினமும், இன்றி -
இல்லாமல், வரும் - உண்டாகின்ற, முத்திக்கு - மோக்ஷத்திற்கு,
இளவரசா -யௌராஜ்ஜிய பதவியையுடையவனே!, நீ - நீ, மந்தரத்தின்
- மஹம்மேரு பர்வதத்தில், மாண்ட - |