|  
       200.	என்றலு மென்னை மன்னர் மைந்தர்தம் பெருமை யென்னாச் 
            சென்றவன் சென்னி சாய்த்திட் டிறைவன்றான் செப்பக் கேட்ட 
            தொன்றுள தென்ப வன்போ லுருவுகொண் டதனி னீங்கி 
            நின்றனன் முடியும் பூணு மாரமுங் குழையு மின்ன.	 
           (இ-ள்.)   என்றலும்  - என்று குமாரர் சொல்லவும், என்னை - 
        என்ன ஆச்சரியம்!,   மன்னர்  மைந்தர்தம்   - இராஜகுமாரர்களாகிய 
        இவர்களது,   பெருமை  - பெருமையானது, என்னா - என்று எண்ணி, 
        அவன் -   அத்தரணேந்திரன்,  சென்று    - ஸ்வாமியின் ஸமீபத்தில் 
        சென்று,    சென்னி   சாய்த்திட்டு   - தலையைச் சாய்த்து அசைத்து, 
        இறைவன் -   ஸ்வாமி,   செப்ப   -   சொல்ல,  தான்-, கேட்டது - 
        கேட்டறிந்ததாகிய,   ஒன்று   -  ஒருகாரியம், உளது - இருக்கின்றது, 
        என்பவன் போல் -  என்று தெரிவிப்பவன்போல நடித்து, அதனினீங்கி 
        - ஸ்வாமி  ஸமீபத்திற் சென்றிருந்ததாகிய அக்காரியத்தினின்றும் நீங்கி 
        வந்து,  உருவுகொண்டு   -  தனது சுய ரூபத்தை யெடுத்துக்கொண்டு, 
        முடியும்   -   மகுடமும்,    பூணும்   -   ஆபரணமும், ஆரமும் - 
        கழுத்திலணியும்   மாலைகளும்,   குழையும் - குண்டலமும், மின்ன - 
        பிரகாசிக்க, நின்றனன் - குமாரர்களுக் கெதிரில் நின்றான், எ-று.						 (60)	 
      201.	முன்னைத்தன் னுருவங் காட்டி முனிவனீர் வேண்டிற் றீய 
            வென்னையின் றருளிச் செய்தா னெழுகநீ ரென்னோ டென்று 
            மின்னுமோர் விமான மேற்றி வேதண்ட மவரோ டெய்தி 
            மன்னராய் நாட்டி யிட்டான் மலைமிசை யரசர்க் கெல்லாம்.	 
           (இ-ள்.)  	    (அப்படி    நின்ற      அவன்)    முன்னை - 
        குமாரர்களுக்கெதிரில், தன் - தன்னுடைய, உருவம் - ரூபத்தை, காட்டி 
        -காண்பித்து, முனிவன் - ஸ்வாமியானவன், நீர் - நீங்கள், வேண்டிற்று 
        - இச்சித்ததை,  என்னை - என்னை, ஈய - கொடுக்கும்படியாக, இன்று 
        - இப்பொழுது,       அருளிச்செய்தான்   - கடாட்சித்து      உரை 
        செய்தான்(ஆகையால்),   நீர் - நீங்கள்,  என்னோடு - என்னுடன்கூட, 
        எழுக என்று - வரக்கடவீராக என்று, மின்னும் - பிரகாசியாநின்ற, ஓர் 
        - ஒப்பற்ற,     விமானம்    -    விமானத்தில், - ஏற்றி, அவர்களை 
        ஏற்றிக்கொண்டு,     அவரோடு     -  அவர்களுடன், வேதண்டம் - 
        விஜயார்த்த பர்வதத்தை,    எய்தி    -     அடைந்து, மலைமிசை - 
        அப்பர்வதத்தின் மேலுள்ள, அரசர்க்கெல்லாம் - அரசர்களுக்கெல்லாம், 
        மன்னராய் - அதிராஜர்கள்   ஆக,  நாட்டியிட்டான் - ஸ்தாபித்தான், 
        எ-று.			                                                 (61)	 
      202.	மனமலி வடக்கிற் சேடி யறுபதுக் கரச னாக 
            வினமியை நாட்டிப் பூரம் கனகபல் லவத்தை யீந்தா 
            னனையவை தெற்கிற் சேடி யைம்பது நமிக்கு மீந்து 
            புனைவருஞ் சக்க வாள மிரதநூ புரத்தை வைத்தான்.  |