200. என்றலு மென்னை மன்னர் மைந்தர்தம் பெருமை யென்னாச்
சென்றவன் சென்னி சாய்த்திட் டிறைவன்றான் செப்பக் கேட்ட
தொன்றுள தென்ப வன்போ லுருவுகொண் டதனி னீங்கி
நின்றனன் முடியும் பூணு மாரமுங் குழையு மின்ன.
(இ-ள்.) என்றலும் - என்று குமாரர் சொல்லவும், என்னை -
என்ன ஆச்சரியம்!, மன்னர் மைந்தர்தம் - இராஜகுமாரர்களாகிய
இவர்களது, பெருமை - பெருமையானது, என்னா - என்று எண்ணி,
அவன் - அத்தரணேந்திரன், சென்று - ஸ்வாமியின் ஸமீபத்தில்
சென்று, சென்னி சாய்த்திட்டு - தலையைச் சாய்த்து அசைத்து,
இறைவன் - ஸ்வாமி, செப்ப - சொல்ல, தான்-, கேட்டது -
கேட்டறிந்ததாகிய, ஒன்று - ஒருகாரியம், உளது - இருக்கின்றது,
என்பவன் போல் - என்று தெரிவிப்பவன்போல நடித்து, அதனினீங்கி
- ஸ்வாமி ஸமீபத்திற் சென்றிருந்ததாகிய அக்காரியத்தினின்றும் நீங்கி
வந்து, உருவுகொண்டு - தனது சுய ரூபத்தை யெடுத்துக்கொண்டு,
முடியும் - மகுடமும், பூணும் - ஆபரணமும், ஆரமும் -
கழுத்திலணியும் மாலைகளும், குழையும் - குண்டலமும், மின்ன -
பிரகாசிக்க, நின்றனன் - குமாரர்களுக் கெதிரில் நின்றான், எ-று. (60)
201. முன்னைத்தன் னுருவங் காட்டி முனிவனீர் வேண்டிற் றீய
வென்னையின் றருளிச் செய்தா னெழுகநீ ரென்னோ டென்று
மின்னுமோர் விமான மேற்றி வேதண்ட மவரோ டெய்தி
மன்னராய் நாட்டி யிட்டான் மலைமிசை யரசர்க் கெல்லாம்.
(இ-ள்.) (அப்படி நின்ற அவன்) முன்னை -
குமாரர்களுக்கெதிரில், தன் - தன்னுடைய, உருவம் - ரூபத்தை, காட்டி
-காண்பித்து, முனிவன் - ஸ்வாமியானவன், நீர் - நீங்கள், வேண்டிற்று
- இச்சித்ததை, என்னை - என்னை, ஈய - கொடுக்கும்படியாக, இன்று
- இப்பொழுது, அருளிச்செய்தான் - கடாட்சித்து உரை
செய்தான்(ஆகையால்), நீர் - நீங்கள், என்னோடு - என்னுடன்கூட,
எழுக என்று - வரக்கடவீராக என்று, மின்னும் - பிரகாசியாநின்ற, ஓர்
- ஒப்பற்ற, விமானம் - விமானத்தில், - ஏற்றி, அவர்களை
ஏற்றிக்கொண்டு, அவரோடு - அவர்களுடன், வேதண்டம் -
விஜயார்த்த பர்வதத்தை, எய்தி - அடைந்து, மலைமிசை -
அப்பர்வதத்தின் மேலுள்ள, அரசர்க்கெல்லாம் - அரசர்களுக்கெல்லாம்,
மன்னராய் - அதிராஜர்கள் ஆக, நாட்டியிட்டான் - ஸ்தாபித்தான்,
எ-று. (61)
202. மனமலி வடக்கிற் சேடி யறுபதுக் கரச னாக
வினமியை நாட்டிப் பூரம் கனகபல் லவத்தை யீந்தா
னனையவை தெற்கிற் சேடி யைம்பது நமிக்கு மீந்து
புனைவருஞ் சக்க வாள மிரதநூ புரத்தை வைத்தான். |