மற்ற தன்கண்
வணிகொரு வன்னுளன்
சொற்க டந்த கொடைக்கைச் சுதத்தனே.
(இ-ள்.) பத்மசங்க
நிதிக்கு - பத்மநிதி சங்கநிதி என்கிற
நிதிகளுக்கு, இடமாயது - ஸ்தானமாயிரா
நின்றதாகிய,
பத்மசண்டமென - பத்மஷண்ட மென்று, பகர் - சொல்லப்பட்ட,
மா - பெரிய, நகரதன்கண் - பட்டணத்தில், சொல்
கடந்த -
வித்துவான்களால் சொல்லப்படும் உரைக்கடங்காது மேற்பட்ட
(அதாவது : அளவில்லாத), கொடை - தியாகம் கொடுத்தலையுடைய,
கை - கையுள்ள, சுதத்தன்
- ஸுதத்தனென்னும்
பெயரையுடையவனாகிய, வணிகொருவன் - ஒரு வணிகனானவன்,
உளன் - இருப்பவனானான், எ-று.
வணிகம் என்னும் வியாபாரத்தின்
பெயர் விகுதிகுன்றி
வணிகுஎன நின்றது; இஃதாகு பெயராய் வணிகனை யுணர்த்திற்று.
மற்று - அசை. (7)
231. மற்ற வன்றன் மனைக்கு விளக்கனாள்
சுற்ற நன்மையி னாமஞ் சுமித்திரை
விற்கு னிப்புரு வத்தொளிர் வேற்கணாள்
கற்ப லர்ந்தவோர் காமரு வல்லியே.
(இ-ள்.) மற்று -
பின்னை, அவன்தன் - அந்தச் சுதத்தனுடைய,
மனைக்கு - வீட்டிற்கு, விளக்கனாள் - தீபம்போல் பிரகாசிப்பவளாகிய
மனையாளானவள், வில் - வில்லைப்போல, குனி -
வளைந்த,
புருவத்து - புருவத்தையும், ஒளிர் - பிரகாசியா நின்ற, வேல் - வேல்
போன்ற, கணாள் - கண்களையும் உடையவளாகிய,
கற்பு -
பதிவிரதாகுணம், அலர்ந்த - உண்டாகி யிராநின்ற, ஓர் - ஒப்பற்ற,
காமர் - அழகு பொருந்திய, வல்லி - பூங்கொடி போன்றவள், சுற்றம்
- பந்துக்களுக்கு, (அவள் செய்யும்) நன்மையின் - நன்மையினால்,
(அவளுக்கேற்பட்ட) நாமம் - பெயரானது, சுமித்திரை - ஸுமித்திரை
யென்பதாகும், எ-று.
காமரு என்பதில் உ - சாரியை.
(8)
232. அந்தி யும்மகல் வானுமுன் னாளினால்
இந்து வைப்பயந் தாங்கவ் விருவரும்
மைந்த னைப்பயந் தார்மதி போல் வளர்ந்
தந்த மில்லுவ கைக்கிட மாயினான்.
(இ-ள்.) அந்தியும் - ஸந்தியாதேவியும்,
அகல் - விசாலமாகிய,
வானும் - ஆகாயமும், முன்னாளினால் - பூர்வபட்சத்தில், இந்துவை
- பாலச்சந்திரனை, பயந்தாங்கு - பெற்றதைப்போல, அவ்விருவரும் -
அந்த இரண்டு பேர்களும், மைந்தனை - குமாரனை, பயந்தார்
-
பெற்றார்கள், (அப்புதல்வன்) மதிபோல் - சந்திர |