வைசயந்தன் முத்திச்சருக்கம் 11


 

யுடையவர்களென்னும்,  புங்கவர்க்கு - சிரேஷ்டர்களுக்கு, இறைவன் -
எஜமானாகிய ஜிநேஸ்ரீவரனது, சிறப்பு - பூஜை,  முன்பு - பிரதமத்தில்,
இலாதன    -    செய்யப்படாதனவாகிய,    மங்கலத்தொழில்கள்  -
சுபகார்யங்கள்,  இல்லை-, அந்த நாடெங்கும் - அத்தேச முழுவதிலும்,
(உள்ள)  யாவரும் - சகலரும்,  மெய்  -  உண்மையாக,  இறைஞ்சி -
வணக்கத்தை யுடையவர்களாகி, ஒழுகலால் - நடக்கிறபடியால், மானம்
- கர்வமும், மாயம் - மாய்கையும், இல்லை - அத்தேசத்தில் கிடையா,
எ-று.                                                  (21)

 22. நடுக்கடற் பிறந்தசங்கி னுள்ளிருந்த பாலினற்
    குடிப்பிறந்த மைந்தர்தங் குழைமுகம் பிறர்மனை
    யிடைக்கண்வைத்த லில்லைகாத லார்கள்மேலு மார்வமூர்
    கடைக்கணோக் கிலாதமாதர் கற்பையாவர் செப்புவார்.

     (இ-ள்.) நடுக்கடல் - நடுச் சமுத்திரத்தில், பிறந்த - உற்பவித்த,
சங்கினுள் - சங்கினுள்ளே,  இருந்த - உண்டாகியிராநின்ற,  பாலின் -
வெண்மையைப்  போல்  (சுத்தமாகிய),  நற்குடிப்பிறந்த   -  உயர்ந்த
குடியில் பிறந்த, குழை - கர்ணகுண்டலத்தை யணிந்திராநின்ற, முகம் -
முகத்தையுடைய,  மைந்தர் - புருடர்கள்,  தம் - தங்களுடைய, கண் -
நேத்திரத்தை, பிறர்மனையிடை - அன்னிய மாதர்மேல், வைத்தலில்லை
-  ஸ்தாபித்து     மனம்     வைப்பதில்லை,    காதலார்கள்மேல் -
வாஞ்சையையுடைய     தங்கள்    புருடர்கள்மேல்,    ஆர்வமூர் -
ஆசைமேலிடுகின்ற,   மாதர் - ஸ்திரீகள்,   கடைக்க ணோக்கிலாத -
அன்னிய   புருடர்களைக்   கடைக்கணித்துப்   பாராத,   கற்பை  -
அவர்களின் பதிவிரதா  குணத்தை,  யாவர் - எவர்கள்,  செப்புவார் -
அளவிட்டுச் சொல்லுவார்கள்? எ-று.

     மேலும் என்பதில் உம்மை - அசை நிறைப்பொருளது; இன்னும்
அதனை உயர்வு சிறப்பும்மையாகக்கொண்டு,  ‘காதலர் மேலும் ஆசை
மேலிடுகின்ற கடைக்  கண்  ணோக்கஞ்  செய்யாத?,  எனப் பொருள்
கூறினும்  அமையும்;   ‘காதலரையும்   ஆசையோடு   நோக்காதவர்?,
எனவே,    அவர்கள்    நிலையற்ற   சிற்றின்பத்தைப்   பெரிதாகப்
பாராட்டாதவரென்பது  பெறப்படும்;  அதனால்  அவர்களின்  கற்பின்
உயர்வு இன்னும் விசேஷித்து நிற்கும்.                        (22)

 23. அணியினுக் கணியனார்க ளாடுமா மயிலனார்
    மணியைமண்ணி வைத்தனார்கள் வஞ்சமின் மனத்தினார்
    பணிவிலா வொழுக்கினார்கள் பண்ணவர்ப் பழிச்சுவார்க்
    கணிகைமாதர் சீலமின்ன காமுறுந் தகையவே.

     (இ-ள்.)  கணிகைமாதர்  -  அந்நாட்டில்  உள்ள  வேசியர்கள்,
அணியினுக்கு  -  அழகுக்கெல்லாம்,   அணியனார்கள்  -  அழகைச்
செய்வாரைப்  போன்றவர்கள்;  ஆடும் - நர்த்தனம்  பண்ணும், மா -
பெருமையுடைய, மயிலனார் - மயில்போன்ற