240. மிக்க லாபத்தின் மேவிய சிந்தையான்
செக்கர் வான மெனத்திகழ் மேனியான்
திக்க னைத்துந் திகழ்ந்ததோர் தேசினாற்
புக்க னன்புரம் வந்தெதிர் கொள்ளவே.
(இ-ள்.) (அவ்வாறடைந்த)
மிக்க - மிகுதியான, லாபத்தின் -
இலாபத்திலே, மேவிய - பொருந்திய, சிந்தையான் - மனதுடையவன், செக்கர்வானமென
- அந்திச் செவ்வானம்போல,
திகழ் -
பிரகாசியாநின்ற, மேனியான் - சரீரத்தையுடையவன், திக்கனைத்தும் -
எத்திக்குகளிலும், திகழ்ந்தது - பிரகாசியா நின்றதாகிய, ஓர் - ஒப்பற்ற,
தேசினால் - ஒளியால், புரம் - அப்பட்டணத்திலுள்ள வர்த்தகர்கள்,
வந்து எதிர்கொள்ள - வந்து எதிர்கொண்டு பேசியழைக்க, புக்கனன் -
அப்பட்டணத்தில் புகுந்தான், எ-று. (17)
241. அந் நகரி னழகும் பெருமையும்
மன்ன னன்மையும் வாணிபத் தாக்கமும்
சொன்ன வைபிற ழாமையுஞ் சோரர்தா
மின்மை யுங்கண் டிருக்கையு மேவினன்.
(இ-ள்.)
(அவ்வாறு புகுந்த அவன்) அந்நகரின்
-
அப்பட்டணத்தின், அழகும் -
அழகையும், பெருமையும் -
மேம்பாட்டையும், மன்னன் -
அரசனுடைய, நன்மையும் -
நற்குணத்தையும், வாணிபத்து - வர்த்தகத்தினது,
ஆக்கமும் -
செல்வத்தையும், சொன்னவை - சொன்ன சொற்கள், பிறழாமையும் -
தவறாத தன்மையையும், சோரர்தாம் - திருடர்
முதலானவர்கள்,
இன்மையும் - இல்லாத தன்மையையும், கண்டு
- பார்த்து,
இருக்கையும் - அந்தப்பட்டணத்தில் வாசமாய்த்
தங்கவேண்டு
மென்கிற எண்ணத்தை, மேவினான் - மனத்திற் பொருந்தினான்,
எ-று.
உம் - அசை.
(18)
242. மற்றிம் மாநக ரத்திலிவ் வான்பொருள்
அற்ற மாகநல் லார்கையில் வைத்தணி
பத்ம சண்டம தெய்தியோர் பாங்கிலே
சுற்ற மும்மழைத் தென்வழித் தொக்கபின்.
(இ-ள்.) (அங்ஙனமெண்ணி)
மற்று - பின்னை, இம்மாநகரத்தில்
- இப்பெரிய பட்டணத்தில், இவ் வான்பொருள் -
என்னுடைய
இப்பெரிய பொருள்களை, அற்றமாக - மறைவாக, நல்லார்கையில் -
பெரியோர்களிடத்தில் அதாவது : குணவந்தர்களிடத்தில்), வைத்து -
வைத்துவிட்டு, அணி - அழகையுடைய, பத்ம |