பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 115


 

     (இ-ள்.) தக்க தொன்று - ஒரு தகுதியான காரியமாம்,  இவன் -
இவனுடைய,  கை - கையிலே, பொருள் - நமது பொருளை, வைத்தல்
என்று - வைப்பதென்று,  அக்கணத்து - அப்பொழுது,  ஒருபாகுடம் -
ஒருமரியாதைப்பொருளை,   ஈந்தபின்  -  கொடுத்தபிற்பாடு,  மிக்க -
மிகுதியாகிய, மாசனம்  -  மஹாஜனங்கள், வீந்ததோர் போழ்தினில் -
நீங்கினதோர்காலத்தில்,   தொக்க  -  சேர்ந்திராநின்ற,  தன்கருமம் -
தனதுகாரியத்தை,       சொல்ல     -      உரைக்க,   மற்றவன் -
அம்மந்திரியானவன், எ-று.                                 (22)

 246. வைத்தல் கோடல் வழங்கிடன் மாய்த்திடல்
     துய்த்தல் மாற்ற லிருந்த விடஞ் சொலல்
     இத்தி றத்துப் பிறன்பொருள் மேற்செலச்
     சித்தம் வைத்தலும் தீவினைக் கேதுவே.

     (இ-ள்.)  வைத்தல்   -   வைக்கிறதும்,  கோடல்  - எடுத்துக்
கொள்வதும்,   வழங்கிடல்   -   பிறருக்குக் கொடுத்து  விடுகிறதும்,
மாய்த்திடல் - நாசஞ்செய்து  குறையப்பண்ணுவதும், துய்த்தல் - தான்
அனுபவிப்பதும்,     மாற்றல்   -   வேறொன்றாக  மாற்றிவிடுவதும்,
இருந்தவிடம் சொலல் - இருக்கின்ற விடத்தைச் சொல்வதும்,  (ஆகிய)
இத்திறத்து    -    இப்போது    சொன்னவகையினால்,     பிறன் -
அன்னியனுடைய,  பொருள்மேல்  -  திரவியத்தின் மேலே,  செல்ல -
செல்லும்படி,   சித்தம்  வைத்தலும்  -  மனத்தினால்   நினைப்பதும்,
தீவினைக்கு - பாவவினைக்கு, ஏதுவாம் - காரணமாகும், எ-று.    (23)

 247. என்ற லும்பணிந் தானுக் கியாவரும்
     நின்றி டாப்பொழு தென்கையி னீட்டென
     அன்ற வன்கை யரும்பொருள் வைத்தபின்
     முந்தை யூர்புக மொய்ம்பனு மேவினான்.

     (இ-ள்.) என்றலும் - என்று மந்திரி சொல்லவும்,  பணிந்தானுக்கு
- (அதைக்   கேட்டு    ஸ்வாமி   அப்படியாவென்று)    வணங்கிய
பத்திரமித்திரனுக்கு,  யாவரும்  -  எவர்களும்,  நின்றிடாப்பொழுது -
இங்கில்லாமல் நீங்கி நான் தனியாயிருக்குங் காலத்தில்,  என் கையில்
- எனது கையில்,  நீட்டென  -  (உன்  பொருளைக்)  கொடுவென்று
மந்திரி சொல்ல, அன்று  -  அப்பொழுது,  அவன் கை - அம்மந்திரி
கையில்,  அரும் பொருள் - அரிதாகிய பொருள்களை, வைத்தபின் -
வைத்த     பிற்பாடு,    மொய்ம்பனும்    -    வல்லமையையுடைய
பத்திரமித்திரனும்,  முந்தையூர் - முன் தனது வாஸமாகிய பத்மஷண்ட
புரத்தை,  புக  - அடைய,  மேவினான் - பொருந்திப்  புறப்பட்டான்,
எ-று.                                                  (24)

 248. வேய்கள் வெந்து வெடித்திடு மோசையும்
     பாய கள்ளி பரற்பொடி யோசையும்