ஆயர் தங்குழ லோசையு
மாலைகள்
பாயு மோசையும் பாய்விரி யோசையும்.
(இ-ள்.) (அவ்வாறு புறப்பட்டு)
வேய்கள் - மூங்கில்கள், வெந்து
- அக்கினியினால் வெந்து, வெடித்திடும் - வெடிக்கின்ற, ஓசையும் -
குறிஞ்சிநில சப்தமும், (நிர்ஜலப் பிரதேசமாகிய
பாலை நிலத்தில்
வெயிலால் வெடித்து) பாய - பரந்த, கள்ளி
- கொடிக்கள்ளி
இலைக்கள்ளி திருகுகள்ளி முதலாகிய கள்ளிகளும், பரல் - பருக்கைக்
கற்களும், பொடியோசையும் - பொடியாகின்ற சப்தமும், ஆயர்தம் - ஆடுமாடுகள்
மேய்க்கின்ற இடையர்களுடைய, குழலோசையும் -
முல்லை நிலத்திலுண்டாகிய புள்ளாங்குழலின் சப்தமும், ஆலைகள் -
இட்சு யந்திரங்களினால், பாயும் - பரந்த, ஓசையும் - மருதநிலத்தின்
சப்தமும், பாய்விரி - கப்பலில் பாய்விரித்துக் கட்டும்,
ஓசையும் -
நெய்தனிலத்தின் சப்தமும், எ-று.
(25)
249. இன்ன வோசை யியம்ப நிலந்தொறும்
பன்ன ரும்பத்ம சண்டம தெய்தினான்
மன்னுஞ் சுற்றமெ லாம்வரக் கொண்டுபோய்த்
துன்னி னான்சீய புரமது தோன்றலே.
(இ-ள்.) (ஆகிய) இன்ன
- இத்தன்மையான, ஓசை - சப்தங்கள்,
நிலந்தொறும் - பஞ்ச நிலங்கள் தோறும்,
இயம்ப - சப்திக்க,
(அந்நிலங்களைக் கடந்துபோய்) பன்னரும் -
சொல்லுதற்கரிய,
பத்மசண்டமது - பத்மஷண்ட புரத்தை, எய்தினான் - அடைந்தான்,
(அங்ஙனம் அடைந்த பின்னர்), தோன்றல் - பெருமையிற்சிறந்தவனான
அப்பத்திரமித்திரன், மன்னும் - சேர்ந்திராநின்ற,
சுற்றமெலாம் -
பந்துக்களெல்லாம், வரக்கொண்டு - வரவழைத்துக்கொண்டு, போய் -
போகி, சீயபுரமது - ஸிம்ம மஹா புரத்தை, துன்னினான் - சேர்ந்தான்,
எ-று. (26)
250. வழிவருத்த மொழித்தவன் வான்கிளைக்
கழிவி லாதவின் பத்தை யளித் திரீஇத்
தொழுத கைசென் றமைச்சனைத் துன்னிநின்
றெழில்பெ றச்சில வின்மொழி கூறினான்.
(இ-ள்.)
(அங்ஙனம் சேர்ந்த பின்பு)
அவன் -
அப்பத்திரமித்திரன், வான் -
பெரிதாகிய, கிளைக்கு -
சுற்றத்தார்களுக்கு, வழிவருத்தம் - வழிநடைச்சிரமத்தை, ஒழித்து
-
நீங்கி, அழிவிலாத - கெடுதலில்லாத, இன்பத்தை - ஸௌக்கியத்தை,
அளித்து - கொடுத்து, இரீஇ -
(அந்நகரில் வாழும்படியாக
அவர்களை) இருத்தி, தொழுதகை -
யாவர்களுங் கண்டு
வணங்கும்படியான குணத்தையுடைய பத்திரமித்திரன், சென்று
-
போய், அமைச்சனை - மந்திரியிடம், துன்னி - சேர்ந்து, |