நின்று - எதிரில் நின்று, எழில்பெற - மேன்மை
படும்படியாக, சில -
சிலவாகிய, இன்மொழி - இனிய வசனங்களை,
கூறினான் -
சொன்னான், எ-று.
(27)
251. செப்ப மும்புக ழும்மறி வுஞ்சிதைத்
தொப்பி லாத பிறப்பை யுடைத்திடா
செப்பி னன்மணி மேன்மனஞ் சிக்குணா
ஒப்பி லாத வுரைப்பதற் கூக்கினான்.
(இ-ள்.) (அப்போது
மந்திரி) செப்பமும் - நடுநிலையையும்,
புகழும் - கீர்த்தியையும், அறிவும் - ஞானத்தையும்,
சிதைத்து -
கெடுத்து, ஒப்பில்லாத - உவமையில்லாத, பிறப்பை - இம்மனுஷ்ய
ஜன்மத்தையும், உடைத்திடா - நாசஞ்செய்து, செப்பின் - செப்புக்குள்
வைத்திராநின்ற, நல் - நன்மையான, மணி மேல் - பத்திரமித்திரனது
இரத்தினங்களின்பேரில், மனம் - தனது மனமானது, சிக்குணா
- அகப்படுத்தப்பட்டு, (அதாவது அவற்றை விரும்பி),
ஒப்பிலாத -
இசையாத வார்த்தைகளை, உரைப்பதற்கு - சொல்வதற்கு, ஊக்கினான்
- உத்ஸாஹித்தான், எ-று.
(28)
252. மாயஞ் செய்த மரச்செப் பனையவன்
மாய மில்லவன் றன்மணி ச் செப்பினை
மாயஞ் செய்து கொளற்கு மனத்தெணா
மாய மேசில வார்த்தையுஞ் செப்பினான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லத்
தொடங்கி) மாயஞ் செய்த -
மாய்கையினாலே செய்யப்பட்ட, மரச் செப்பனையவன் - மரத்தின்
செப்பிற் கொப்பவன், (அதாவது : கருமமதிகரித்து
ஞானங்
குறைந்தவன்), மாயமில்லவன் தன் -
மாயாச் சாரமில்லாத
பத்திரமித்திரனது, மணிச் செப்பினை - இரத்தினச் செப்பை, மாயஞ்
செய்து - வஞ்சனை செய்து, கொளற்கு - ஸ்வீகரித்துக் கொள்வதற்கு,
மனத்து - மனதில், எணா - எண்ணி, மாயமே - பொய்யாகவே, சில - சிலவாகிய,
வார்த்தையும் - வசனங்களையும், செப்பினான் - (கீழ்
வருமாறு) சொன்னான், எ-று.
253. எங்கு நீயுளை யாவனீ மற்றுநீ
எங்குப் போவ தெனச்சொல வேந்தலும்
வங்க மீதுவந் தன்று மணிச்செப்புத்
தங்கை தந்துபோம் வாணிக னானென்றான்.
(இ-ள்.) நீ - நீ, எங்கு
- எவ்விடம், உளை - இருக்கின்றாய், நீ
யாவன் - நீ யார், மற்று - பின்னை, நீ எங்குப்போவது - நீ எங்குப்
போகின்றாய், என - என்று, சொல்ல - மந்திரிகேட்க,
ஏந்தலும் -
(பெருமையிற் சிறந்தவனாகிய) |