ஸ்ரீஷ்டியும், வங்கமீது - கப்பலின்மீது,
அன்று - அன்றொருநாள்,
வந்து - இவ்விடம் வந்து, மணிச்செப்பு - இரத்தினச் செப்பை, தம்கை
- தங்கள் கையில், தந்து - கொடுத்துவைத்து, போம் - போய் வந்த,
வாணிகன் - வர்த்தகன், நான் - யானாகும், என்றான்
- என்று
சொன்னான், எ-று. (30)
254. செப்பெ னச்செப்பி யிட்டதென் செப்பென
ஒப்பி லாத மணிச்செப்பு வைத்தது
தப்பி லீர்மறந் திட்டதோ தானென
எப்ப டிப்பித்த னோவென் றுரைத்தனன்.
(இ-ள்.) (அதைக்கேட்டு
மந்திரி) செப்பென - இரத்தினச்
செப்பென்று, செப்பியிட்டது - சொல்லப்பட்டது, என் -
என்ன,
செப்பென - அதைச் சொல்வாயாக என, (வணிகன்)
ஒப்பிலாத -
உவமையில்லாத, மணிச்செப்பு - இரத்தினச் செப்பை, வைத்தது
-
உம்மிடம் வைத்ததை, தப்பிலீர் -
குற்றமில்லாத தாங்கள்,
மறந்திட்டதோ - மறந்துவிட்டீர்கள் போலும், என - என்றுரைக்க,
எப்படி - எப்படிச் சொன்னாய்?,
பித்தனோவென்று - நீ
பைத்தியக்காரனோ வென்று, உரைத்தனன் -
மேலும் மந்திரி
கீழ்வருமாறு சொன்னான், எ-று.
தான் - அசை. (31)
255. என்று நானுனைக் கண்டறி யேனினி
மன்ற வென்கை மணிச்செப்பு வைத்த நாள்
நின்ற சான்றுள தாகினீ காட்டினால்
ஒன்று மன்றிமற் றுன்னோடே போகுமே.
(இ-ள்.) என்றும்
- எப்பொழுதும், நான் - யான், உனை -
உன்னை, கண்டறியேன் - பார்த்ததில்லை, இனி - இனிமேல், மன்ற - பொருந்த, என்கை
- எனது கையில், மணிச்செப்பு - இரத்தினச்
செப்பை, வைத்த நாள் - நீ வைத்த தினத்தில், நின்ற - நிலையான,
சான்று - சாட்சி, உளதாகில் - உண்டாகில், நீ - நீ, காட்டினால்
-
அதைக் காண்பித்தால், ஒன்றும் -
பொருந்தும், அன்றி -
அல்லாவிட்டால், மற்று - பின்னை, உன்னோடே
- (உனது
வார்த்தையானது) உன்னுடனே, போகும்
- போய்விடும்,
(என்றுரைத்தான்), எ-று. (32)
256. நன்று சாலவு நம்பிநின் பேரினுக்
கொன்ற வேயுரைத் தாய்செப்பு வைத்தநாள்
அன்று மின்று மலாதுள நாளினால்
என்று மென்னைநீ கண்டது மில்லையே. |