பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 119


 

     (இ-ள்.)  (அதைக்கேட்டு)  நம்பி   - புருஷரிற்  சிறந்தோனே!,
சாலவும்  -  மிகுதியாக,  நன்று  -  நல்லது,  நின்  -  உன்னுடைய,
பேரினுக்கு   -   புகழினால்   வியாபித்த   பேருக்கு,   ஒன்றவே -
பொருந்தும்படியாகவே,    உரைத்தாய்  -  சொல்லினாய்,   செப்பு -
இரத்தினச் செப்பை, வைத்த - உன்னிடம் வைத்த,  நாள் - நாளாகிய,
அன்றும்   -  அந்நாளும்,   இன்றும்  -  (நான்  வந்து  கேட்கின்ற)
இந்நாளும்,  அலாது - அல்லாமல், உள - உண்டாகிய,  நாளினால் -
நாட்களில்,  என்றும்  - என்றைக்கும்,  நீ - நீ,  என்னை - என்னை,
கண்டதுமில்லை - பார்த்தது மில்லை, எ-று.

     இது நிந்தாஸ் துதியாகக் கூறியது.                      (33)

 257. சான்று வேண்டினுஞ் சத்திய கோடராம்
     ஆன்ற நீரன்றி யில்லையன் றியாவர்க்குந்
     தோன்றி டாமைத் தரவென்று சொன்னநாட்
     சான்று வேண்டுஞ் சடத்தை யறிந்திலேன்.

     (இ-ள்.)  சான்று - சாக்ஷி,  வேண்டினும் - நீர் வேண்டியதாய்க்
கேட்டாலும்,     சத்தியகோடராம்     -      ஸத்யகோஷரென்னும்
பெயரையுடையவராகிய,  ஆன்ற - பெரிய,  நீரன்றி - நீங்களல்லாமல்,
அன்று - அந்நாளில்,  இல்லை  -  வேறொரு சாட்சியமிருந்ததில்லை,
யாவர்க்கும்   -   எவர்களுக்கும்,   தோன்றிடாமை  -   தெரியாமல்,
தரவென்று  -  பொருளைக்  கொடுப்பாயாகவென்று, சொன்ன நாள் -
நீர்   சொன்ன   காலத்தில்,  சான்று  வேண்டும்  -   இப்போது நீர்
சாட்சியத்தை  இச்சிக்கும்,  சடத்தை  -  இச்சடபுத்தியை  (அதாவது :
அஞ்ஞானத்தை), அறிந்திலேன் - யானறியவில்லை, எ-று.        (34)

 258. கணம தொன்றிலே கண்புதைத் திட்டழப்
     பிணம தாகுமிவ் வாழ்க்கையைப் பேணுவான்
     அணிக ளாமறி வும்புக ழுங்கெட
     மணிகண் மேன்மனம் வைத்ததோர் மாயமே.

     (இ-ள்.)  கணமதொன்றில் - ஒரு க்ஷணநோத்திற்குள்ளாக, கண்
புதைத்திட்டு  -  கண்ணை  மூடிக்கொண்டு,   அழ  -  சுற்றத்தாரழ,
பிணமதாகும்  - பிரேதமாகும்படியான,  இவ்வாழ்க்கையை - மனுஷ்ய
சரீரத்தினாலாகிய   இந்த   ஸம்ஸார   வாழ்க்கையை,  பேணுவான் -
காக்கும்பொருட்டு,    அணிகளாம்    -    இம்மனிதப்   பிறப்புக்கு
ஆபரணங்களாகிய,   அறிவும்  -  ஞானமும்,  புகழும்  - கீர்த்தியும்,
கெட  -  கெட்டு  நீங்க,  மணிகள்மேல்  -  இரத்தினங்களின் மேல்,
மனம்  வைத்தது  - வஞ்சித்துக்  கொள்வதற்கு மனம் வைத்ததானது,
ஓர் - ஒரு, மாயம் - அஞ்ஞானமாகும், எ-று.                  (35)