பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 121


 

     (இ-ள்.) என்றலும் - என்று பத்திரமித்திரன் சொல்லவும், எழுந்த
- உண்டாகிய,  கோபத்து  -  கோபத்தினாலே,  எறி  எறி யென்ன -
இவனை அடி  அடியென்று சொல்ல,  நின்றார் - அவ்விடத்தில் நின்ற
ஏவலாளர்கள்,  ஓடி  -  போய், பொன்றுமாறு - இறந்து படும்படியாக
(அதாவது :  மிகுதியாக),  அடித்து - அடித்து,  புறப்பட - வெளியில்
போகும்படியாக, தள்ள - அவனைத் தள்ளிவிட,  போந்திட்டு - வந்து,
அன்று -  அப்பொழுது,  அவன் - அம்மந்திரி,  அடித்து - அடித்து,
செப்புக்கொண்டதற்கு - இரத்தினச் செப்பை யபகரித்துக்கொண்டதற்கு,
அவலமுற்று   -   வருத்தமடைந்து,    தெருவுதோறும்    சென்று -
வீதிகள்தோறும்  போய்,  அவன் - அப்பத்திரமித்திரன்,  சில பகல் -
சில   தினங்கள்,  பூசலிட்டான்  -  (கீழ்வருமாறு)  இரைச்சலிட்டான்,
எ-று.                                                  (38)

 262. சத்திய கோட னென்னுஞ் சாதியால் வேதி யன்றான்
     வித்தத்தாற் பெரியன் றூய னென்றியான் மிகவுந் தேறி
     வைத்தவென் மணியைக் கொண்டு தருகிலன் மன்னகேண்மோ
     பித்தனு மாக்கு மென்னைப் பெரும்பொரு ளடக்கு வானே.

     (இ-ள்.)  (அவ்வாறு  இரைச்சலிடத் தொடங்கிய அவன்) சத்திய
கோஷனென்னும்   -   சத்திய    கோஷனென்கின்ற,    சாதியால் -
ஜாதியினால்,   வேதியன்  -  பிராம்மணனாகிய   ஸ்ரீ  பூதி  என்கிற
மந்திரியானவன், வித்தத்தால்  -  ஞானத்தால், பெரியன் - பெரியவன்,
தூயன், பரிசுத்த குணத்தையுடையவன்,  என்று  -  என்று  நினைத்து,
யான்  -  நான், மிகவும் -  மிகுதியாக,  தேறி - தெளிந்து, வைத்த -
அவனிடம்  கொடுத்து   வைத்த,  என்  -  எனது,  மணியை - இ??
தினத்தை, கொண்டு கைக்கொண்டு, தருகிலன் - அவன் கொடுக்கிலன்,
பெரும்பொருள் - எனது பெரிய பொருளை, அடக்குவான் - தனக்குள்
அடக்கிக்கொள்ளும் பொருட்டு, என்னை - என்றனை, பித்தனுமாக்கும்
- பைத்தியக்காரனாகவும் செய்கின்றான், மன்ன - இந்நகரத்தையாளும்
அரசனே!,     கேண்மோ    -   இதைக்   கேட்பாயாக,    (என்று
கூச்சலிட்டுக்கொண்டு திரிந்தான்), எ-று.                      (39)

 263. தன்வழிக் குற்றங் காணாக் கண்ணெனத் தான்செய் குற்ற
     முன்னிடா தவனைக் கோபித் தூர்வயிற் கடிய லுற்று
     மின்னெனக் கரக்குங் கள்ளர் தங்களை விட்டான் வீட்டி
     லுன்னுதற் கரிய வாய பொருளெலா மொருங்கு கொண்டார்.

     (இ-ள்.)  தன்வழி   -  தன்னுளுண்டாகிய, குற்றம் - குற்றத்தை,
காணா  -  காணாத,  கண்ணென   -  நேத்திரத்தைப்  போல, தான்
செய்குற்றம்   -   (இம்மந்திரியானவன்)  தான்  செய்த  தப்பிதத்தை,
உன்னிடாது   -  நினைத்தறியாமல், அவனை - அப்பத்திரமித்திரனை,
கோபித்து - சினந்து, ஊர்வயிற் கடியலுற்று - அவ்வூரி