லிருந்தும் நீக்க உத்தேசித்து, மின்னென -
மின்னல்போல், கரக்கும் -
பிறர் பொருளைத் திருடி மறையும் சாமர்த்தியமுள்ள, கள்ளர் தங்களை
- சோரர்களை, வீட்டில் - (பத்திரமித்திரனது) கிருகத்தில், விட்டான் -
ஏவினான், உன்னுதற்கரியவாய - நினைத்தற் கருமையானவையாகிய,
பொருளெலாம் - எல்லாப் பண்டங்களையும், ஒருங்கு - ஒருங்காக,
கொண்டார் - (அத்திருடர்) அபகரித்துக்கொண்டார்கள், எ-று.
(40)
264. பணமணிக் கிரங்கு நாகம் பணத்தையு மிழந்த தேபோற்
றுணிமணிக் கிரங்கு நாய்கன் றொடுபொருண் முழுதும் போகக்
குணமணி யிலாத கோடன் கள்வனென் பொருள் கொண்டானென்
றணிநக ரிரங்க வாற்றப் பூசலிட் டவல முற்றான்.
(இ-ள்.) (அவ்வாறு
கொள்ளவே) பணம் -
தனது
பணாமுடியிலிருக்கும், மணிக்கு - இரத்தினத்துக்கு,
இரங்கும் -
(அதனை யிழந்து) வருத்தமடையும், நாகம் - நாகமானது, பணத்தையும்
- பணாமுடியையும், இழந்ததேபோல் - இழந்து விட்டதைப்போல்,
துணி - ஒளிபெற்ற, மணிக்கு - தனது இரத்தினங்களுக்கு, இரங்கும் -
வருத்தமடைகின்ற, நாய்கன் - வணிகனாகிய பத்திரமித்திரன், தொடு
பொருள் முழுதும் - தனது பெரும்பொருளெல்லாம்,
போக -
போய்விட, குணமணியிலாத - அழகிய நற்குணமில்லாத, கோடன் -
ஸத்தியகோஷனென்னும், கள்வன் - திருடன், என் பொருள் - எனது
வீட்டிலுள்ள பொருள்களையும், கொண்டானென்று - அபகரித்துக்
கொண்டானென்று, அணி - அழகிய, நகர் -
பட்டணத்திலுள்ள
ஜனங்கள், இரங்க - கேட்டு வருத்தமடையும்படியாக, ஆற்ற
-
மிகவும், பூசலிட்டு -
இரைச்சலிட்டு, அவலமுற்றான் -
வருத்தமடைந்தான், எ-று. (41)
265. மன்னவ னதனைக் கேட்டு மந்திரி தன்னைக் கூவி
என்னிவ னுரைத்த தென்ன விறைவகே ளிவனோர் பித்தன்
றன்னையா னறிந்த தில்லை தருகவென் மணிச்செப் பென்னாப்
பின்னைபோ யென்னைக் கள்வ னென்றிட்டான் பெரிய பூசல்.
(இ-ள்.)
மன்னவன் - ஸிம்மஸேனவரசன், அதனை -
(அந்தவணிகனால் இடப்பட்ட) அவ்விரைச்சலை, கேட்டு - கேட்டு,
மந்திரி தன்னை - அமைச்சனாகிய ஸத்தியகோஷனை,
கூவி -
அழைத்து, என் - என்ன, இவன் - இவ்வணிகன்,
உரைத்தது -
சொல்லுவது, என்ன - என்று கேட்க, (அவன்) இறைவ - அரசனே!,
கேள் - கேட்பாயாக, இவன் - இம்மனிதன், ஓர் - ஒரு, பித்தன்
-
பைத்தியக்காரன், தன்னை - இவன்றன்னை,
யான் - நான்,
அறிந்ததில்லை - என்றுங்கண்டதில்லை, (அப்படியிருக்கச்
சில
தினங்கட்கு முன் என்னிடம் வந்து) தருக என்மணிச்செப் பென்னா -
என்னுடைய இரத்தினச் செப்பைக் கொடுப்பாயாக |