124மேருமந்தர புராணம்  


 

விரோத    மில்லாமல்    உள்ளதைச்    சொல்லி,   கூப்பிட்டான் -
பத்திரமித்திரன் இரைச்சலிட்டான், எ-று.                      (44)

 268. சிறகமை பறவை பேர்ப்பா னுடம்பெலாஞ் செடியின் மூடிப்
     பறவையைச் சிமிழ்ப்பின் வாங்கும் பாவியைப் போல நீயும்
     மறையவ னறிவ னென்னும் மாயத்து மறைந்து நின்றென்
     பெறலரும் மணியைக் கொண்டா யென்றவன் பேசக் கேளா.

     (இ-ள்.) (அப்படிப் பூசலிட்டுப் பின்னரும்) சிறகு - இறகு, அமை
- அமைந்த,  பறவை - பக்ஷிகளை, பேர்ப்பான் - பிடிப்பான் வேண்டி,
உடம்பெலாம் - தனது சரீரமுழுமையும், செடியின் - தழைகளால், மூடி
- மறைத்து,  பறவை  -  அப்பக்ஷிகளை, சிமிழ்ப்பின் -  வலைக்குள்,
வாங்கும் - வளைத்துப் பிடிக்கின்ற, பாவியைப்போல -பாபிஷ்டனாகிய
குருவிக்காரனைப் போல, நீயும் -  நீயும்,  மறையவன் - பிராம்மணன்,
அறிவன்  -  ஞானத்தையுடையவன், என்னும் -  என்கிற,  மாயத்து -
மாய்கையினால்,   மறைத்து  -  உனது  கள்ளத்தை  மூடி,  நின்று -
மோசவழியிலே நின்று, என் - என்னுடைய, பெறலரும் - சம்பாதித்தற்
கருமையாகிய, மணியை - இரத்தினத்தை, கொண்டாய்  - அபகரித்துக்
கொண்டாய், என்று - என்று  சொல்லி, அவன் - அப்பத்திரமிரத்தின்,
பேச   -   மந்திரியை   நிந்தித்துப்  பேசி   இரைச்சலிட,  கேளா -
அதைக்கேட்டு, எ-று.                                     (45)

 269. படுமத யானை விட்டும் பாசத்தி னாயை விட்டும்
     கொடி நகர்ப் பேயன் றன்னைக் கடிகவென் றமைச்சன் கூறக்
     கடியவர் படியிற் கண்டு செய்வதற் கஞ்சிக் காலை
     நெடியதோர் மரத்தி னேறி நித்தமா யழைத்திட் டானே.

     (இ-ள்.)  படுமதயானை - கொல்லுகின்ற மதயானையை, விட்டு -
(இவ்வணிகன் மேல்)  விட்டும், பாசத்தின் - சங்கிலியினாற் பிணித்திரா
நின்ற,   நாயை  -  வேட்டை  நாய்களை,   விட்டும்   -   ஏவியும்,
பேயன்றன்னை  -  பைத்தியக்காரனாகிய  இவனை, கொடி - துவஜக்
கொடிகளையுடைய,   நகர்   -   இந்நகரத்தினின்றும், கடிகவென்று -
துரத்துவீராக என்று,  அமைச்சன் - மந்திரியானவன்,  கூற - சொல்ல,
கடியவர்     -     கொடுமையையுடையவர்களாகிய     அவனுடைய
ஏவலாளர்கள்,  படியில் - பூமியில், கண்டு - இவ்வணிகனைப் பார்த்து,
செய்வதற்கு  -  அப்படியே  செய்வதற்கு, அஞ்சி - வணிகன் பயந்து,
காலை  -  பிராதக்  காலத்தில்,  நெடியது  - பெரிதாகிய, ஓர் - ஒரு,
மரத்தின்  -  விருக்ஷத்திலே, ஏறி  -  ஏறி, நித்தமாய் - நாள்தோறும்,
அழைத்திட்டான் - (கீழ் வருமாறு) கூச்சலிட்டான், எ-று.        (46)

 270. தூயநல் வேத நான்குஞ் சொல்லிய சாதி யாதி
     மேயநல் லமைச்ச னென்றும் விருதுமெய் யுரைத்த லென்றுந்