பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 125


 

     தீயினற் றொழில னென்றுந் தேறியான் வைத்த செப்பை
     மாயநீ செய்து கொண்டால் வரும்பழி பாவ மன்றோ.

     (இ-ள்.)  தூய - பரிசுத்தமாகிய,  நல்  -  நன்மையான, வேதம்
நான்கும்  -  சதுர்வேதங்களும்,  சொல்லிய  -  உரைத்த, சாதியாதி -
முதல்   ஜாதியில்,   மேய  -  பொருந்திய,  நல்  -  நன்மையாகிய,
அமைச்சனென்றும்  - மந்திரி யென்றும், விருது - தனது விரதமானது,
மெய்யுரைத்த  லென்றும்  -  ஸத்தியங்  கூறுதலென்றும்,   தீயின் -
அக்கினியினாலே,   நற்றொழிலெனென்றும்   -  (ஆகார வேளைக்கு
முன்)   ஒளபாஸனம்  செய்யப்பட்ட  குணமுடைவனென்றும்,  தேறி -
தெளிந்து,  யான் - நான், வைத்த - அடைக்கலமாக வைத்த, செப்பை
- இரத்தினச்  செப்பை, நீ - நீ,  மாயஞ்செய்து  -  வஞ்சனைசெய்து,
கொண்டால் - அபகரித்துக்கொண்டால், பழி - பழிச்சொல்லும், பாவம்
- பாவமும், வருமன்றோ - வந்துசேரும், எ-று.

 271. கொற்றவெண் குடையுஞ் சீயவணையுஞ்சா மரையு நீத்தால்
     வெற்றிவேல் வேந்த னென்னநீ யென்ன வேறி லாதாய்
     குற்றமென் றறிந்து மென்ன குறையிலென் செப்பைக் கொண்டாய்
     மற்றிதோ பூதி மாய மாகுமிவ் வையத் தையா.

     (இ-ள்.) (அரசன்  இராஜ்ஜியத்தைக் கவனிக்க முடியாமலிருக்கும்
சில சமயங்களில்) கொற்றம் - வெற்றி பொருந்திய, வெண் குடையும் -
வெள்ளைக்  குடையும்,  சீயவணையும் - சிம்மாஸனமும், சாமரையும் -
வெண்சாமரையும்,  நீத்தால் - தான் நீக்கி  உனக்களித்தால், வெற்றி -
வெற்றி பொருந்திய,   வேல்   -  வேலையுடைய,  வேந்தனென்ன -
அரசனென்றும், நீயென்ன - நீ என்றும், வேறிலாதாய் - வேறில்லாமல்
அவ்வரசனுக்குச்  சமானமான தன்மையைப் பெற்றிருக்கக் கூடியவனே!,
குற்றமென்றறிந்து  -  பிறர் பொருள்களை  அபகரிப்பது  குற்றமென்று
தெரிந்திருந்தும்,  ன்ன  குறையில் - உனக்கு  என்ன குறைவால், என்
செப்பை - எனது இரத்தினச்செப்பை, கொண்டாய் - கைக்கொண்டாய்,
பூதி - ஸ்ரீ பூதியாகிய மந்திரியே!, இவ்வையத்து - இவ்வுலகத்தில், இது
- இச்செய்கை, மாயமாகும் - மாயத்தையுடையதாகும், ஐயா - ஐயனே!,
எ-று.

     மற்று, ஓ - அசைகள்.                               (48)

 272. மறம்பழி சிறுமை நிந்தை வந்தெய்த மணியை வவ்வின்
     அறம்புகழ் பெருமை சீர்த்தி யறிவொடு செறிவி லாக்கும்
     மறந்துவைத்தூறு தொட்டு வைப்பினை வவ்வு வாரைத்
     துறந்திடுந் திருவென் றோதுஞ் சுருதியும் விருத்த மாய்த்தோ.