(இ-ள்.)
மறம் - பாவமும், பழி - பழிச்சொல்லும், சிறுமை -
தாழ்மையும், நிந்தை - இகழ்ச்சியும், வந்தெய்த - வந்தடையும்படியாக,
மணியை வவ்வின் - எனது இரத்தினத்தை அபகரித்தால், (அது) அறம்
- தருமமும், புகழ் - புகழ்ச்சியும், பெருமை - மேம்பாடும், சீர்த்தி
-
சிறப்பும், அறிவொடு - ஞானமும், செறிவு - சேர்தல், இல் ஆக்கும் -
இன்மையாக்கும், (ஆயினும் மந்திரி சௌக்கியமாயிருக்கின்றான்;
ஆதலின்) மறந்து - தெரியாமல், வைத்து - வைக்க, ஊறுதொட்டு -
இடையூறு செய்யத் தொடங்கி, வைப்பினை -
அந் நிக்ஷேபப்
பொருளை, வவ்வுவாரை - அபகரிப்பவர்களை, திரு -
இலக்குமி,
துறந்திடும் - நீங்கிவிடும், என்றோதும் - என்று சொல்கின்ற, சுருதியும்
- சாஸ்திரமும், விருத்தமாய்த்து -
இம்மந்திரி விஷயத்தில்
பயனற்றதாயிருக்கின்றது, எ-று.
(49)
273. வடிநுனைப் பகழிநூறும் மன்னரை மாயஞ் செய்திட்
டடுமத யானை வவ்வ லமைச்சருக் காய வஞ்சம்
வடுவிலார் தேறித் தங்கைப் பொருளினை வைத்து வந்து
அடிமிசை யுறங்கும் போழ்தில் வஞ்சிப்பர் னமைச்ச னாமோ.
(இ-ள்.) வடி - கூர்மைபெற்ற,
நுனை - நுனியையுடைய, பகழி -
அம்புகளை, நூறும் - செலுத்தும்படியான, மன்னரை - பகையரசரை,
மாயஞ் செய்திட்டு - மாறுபாடு செய்து, அடும் - பிறரைக் கொலை
செய்யும்படியான, மதம் - மதம் பொருந்திய, யானை - அவர்களது
பட்டத்து யானையை, வவ்வல் - அபகரிக்கின்றது, அமைச்சருக்கு -
அரசனுடைய மந்திரிகளுக்கு, ஆய - உண்டாகிய,
வஞ்சம் -
வஞ்சனையாகும், (அப்படியல்லாமல்) வடுவிலார்
- குற்ற
மில்லாதவர்கள், தேறி - நல்லவரென்று தெளிந்து, தம் - தங்களுடைய,
கைப்பொருளினை - சொந்தப் பொருளை, வைத்து
- வைத்து
விட்டுப்போய், வந்து - மறுபடி வந்து, அடிமிசை - பாதத்தின் பேரில்
நமஸ்கரித்து, உறங்கும் போழ்தில் -வாடிக்கிடந்து கேட்குங் காலத்தில்,
வஞ்சிப்பான் - வஞ்சனை செய்பவன், அமைச்சனாமோ -
இராஜ
மந்திரியாவனோ?, எ-று.
(50)
274. மந்திரம் பயின்று சால வல்லவர் தமக்குப் பேய்கள்
மந்திரம் பூதி தன்னா லன்றிமற் றொன்றிற் றீரா
வெந்துயர் நரகத் துய்க்கும் வேகத்து மோகப் பேயை
மந்திரி பூதி நீயேன் றீர்த்திடா வாறி தென்றான்.
(இ-ள்.) மந்திரம்
பயின்று - மந்திரங்களைக்கற்று, சால -
மிகவும், வல்லவர் தமக்கு வல்லமையையுடையவர்களுக்கு, பேய்கள் -
பிசாசுகள், மந்திரம் -
மந்திரத்தினாலும், பூதிதன்னால் -
விபூதியினாலும், அன்றி - அல்லாமல், மற்றொன்றில் - வேறொன்றால்,
தீரா - நீங்கமாட்டா, (அப்படியிருநதும்) வெம் - வெப்பம் |