279. மத்தக் களிற்றா னழைப்பான் மத்தனென்ன
மங்கை
நித்தம் வந்தம் மரத்தப்பொழுது தேறி நீதி
வைத்த வகையா லுரைப்பான் மத்தனல்ல னென்ன
முத்தன்ன பல்லாய் முறைநீயிது கேண்மோ வென்றான்.
(இ-ள்.) (அதைக்கேட்டு)
மத்தம் - மதம்பொருந்திய, களிற்றான்
- யானையையுடைய அரசன், அழைப்பான்
- அப்படி
இரைச்சலிடுபவன், மத்தன் - பயித்தியக்காரன், என்ன
- என்று
சொல்ல, மங்கை - இராமதத்தை, நித்தம் - நாடோறும்,
வந்து -
அரண்மனை எதிரில் வந்து, அம்மரத்து - அவ்விடமிருக்கும் பெரிய
விருக்ஷத்தின் பேரில், அப்பொழுது - அவ்விடியற்காலத்தில், ஏறி
-
ஏறிக்கொண்டு, நீதி வைத்தவகையால் - முன்பின் விரோதமில்லாமல்
நீதி பொருந்திய விதமாக, உரைப்பான் - சொல்லுகின்ற
இவன்,
மத்தனல்லன் - பைத்தியக்காரனல்லன், என்ன -
என்று சொல்ல,
முத்தன்னபல்லாய் - முத்துப்போன்ற பற்களையுடைய தேவியே!, நீ -
நீ, இது முறை - இந்தமுறைப்பாட்டை, கேண்மோ - கேட்கக்கடவாய்,
என்றான் - என்று அரசன் தேவியிடத்தே சொன்னான், எ-று.
வேறு.
280. நீதியே படித்தான் போலவழைக்கின்றான் வழக்கு நின்ற
வேதியன் செயலு மெல்லாம் விளக்குப்போற் காட்ட வல்லன்
சூதியான் பூதி யோடு பொருதபின் னென்னச் சொன்னாள்
யாதுநீ வேண்டிற் றெல்லா மிசைந்தன னென்று சொன்னான்.
(இ-ள்.)
(அதைக்கேட்டு இராமதத்தை) நீதியே - நீதி
சாஸ்திரமே, படித்தான் போல
- படித்தவன் போல
வித்தியாசமில்லாமல், அழைக்கின்றான் -
சொல்பவனாகிய
வணிகனுடைய, வழக்கும் - வழக்கையும், நின்ற - மந்திரி பதத்தில்
நிலைபெற்றிருக்கின்ற, வேதியன் - ஸ்ரீபூதியாகிற பிராமணனுடைய,
செயலும் - செய்கையும், (ஆகிய) எல்லாம் -
எல்லாவற்றையும்,
விளக்குப்போல் - சகலத்தையும் காட்டும் தீபம்போல,
காட்ட -
காண்பித்தற்கு, சூது - சூதாட்டத்தில், யான் - நான்,
பூதியோடு -
ஸ்ரீபூதியுடன், பொருதபின் - எதிர்த்து ஆடிய பிறகு,
வல்லன் -
வல்லமையுடையளாவேன், என்ன - என்று, சொன்னாள் - கூறினாள்,
நீ - நீ, வேண்டிற்று - இச்சித்தது, யாது -
எதுவோ, எல்லாம் -
அதற்கெல்லாம், இசைந்தனன் - நான் பொருந்தினேன்,
என்று
சொன்னான் - என்று அரசன் சம்மதித்துக் கூறினான், எ-று. (57)
281. அரசன தருளி னாலே மந்திரி யவனைக் கூவிப்
பெரிதுபோமாக வுண்டாடிப் பின்னையொன் றைத்தொடங்கா |