வைசயந்தன் முத்திச்சருக்கம் 13


 

நகரச்சிறப்பு.

வேறு.

 26. அறைகழ லரசர் கோமா னிருக்கைய தமைதி செப்பிற்
    குறைவிலா வீத சோகங் குபேரன திருக்கை போலும்
    நெறியினாற் புகை யிரண்டா றொன்பது நீண்ட கன்று
    மறுகுமா நதிகள் போன்று வழங்குமா யிரத்த தாமே.

     (இ-ள்.)  அறை - சப்தியாநின்ற, கழல் - வீரகண்டையையுடைய,
அரசர்   கோமான்   -   இராஜாதிராஜனான    சக்ரவர்த்தியானவன்,
இருக்கையது - இராநின்ற இராஜதானியினது, அமைதி - மாட்சிமையை,
செப்பில்     -     சொல்லு    மிடத்தில்,    (அது)   குறைவிலா -
தனமுதலியவைகளாற்  குறைவில்லாத,  குபேரனது - குபேரனென்னும்
தேவனுடைய,   இருக்கைபோலும்   -   நகரமாகிய  அளகாபுரிக்குச்
சமானமாகின்ற,  வீதசோகம் - வீதசோகமென்னும் பெயருடையதாகும்;
நெறியினால்   -   கிரமத்தால்   (அந்நகரானது),  புகையிரண்டாறு -
பன்னிரண்டு யோசனை,  நீண்டு - நீளமாகி,  ஒன்பதகன்று - ஒன்பது
யோசனை யகலமாகி,  மாநதிகள்போன்று - ஜலம் பற்றறாமலொழுகும்
மஹா   நதிகளுக்குச்   சமானமாகி,   வழங்கும்   -   ஜனங்களால்
செல்லப்படுகின்ற,   மறுகு   ஆயிரத்ததாம்   -   ஆயிரம்   மஹா
வீதிகளை யுடைத்தானதாம், எ-று.                          (26)

 27. அறுபது தலைவைத் திட்ட மூன்றுநூ றறிவன் கோயில்
    செறிமலர்ச் சோலைக் குன்றம் வாவியுஞ் செப்பி னன்ன
    அறுபதிற் குணிக்கப் பட்ட வாயிரஞ் சேரி பாடி
    யறுபதோ டிசைந்த பத்தாற் குணித்தவா யிரங்க டாமே.

     (இ-ள்.)   அறிவன் - சர்வக்கியனுடைய,   கோயில் - ஸ்ரீ ஜிந
சைத்யாலயங்கள்,  அறுபது  தலை  வைத்திட்ட  -  அறுபது என்கிற
கணக்கை  முதலில்  வைக்கப்பட்ட,  மூன்று  நூறு  -  முந்நூறாகும்,
(அதாவது  முற்நூற்றறுபதாகும்),  செறி - சேர்ந்திராநின்ற,  சோலை -
தோப்புகளும், குன்றம் - செய்குன்றங்களும்,  வாவியும் - குளங்களும்,
செப்பின்    -    சொல்லப்புகுந்தால்,   அன்ன   -   முன்சொன்ன
அக்கணக்கையுடையனவேயாம்,         (அதாவது   :    தனித்தனி
முந்நூற்றறுபதாம்),    சேரி   -    இடைச்சேரி    முதலாகியவைகள்,
அறுபதிற்குணிக்கப்பட்ட  வாயிரம்  -  அறுபதினாயிரமாகும்,  பாடி -
பாடி என்னும் இடங்கள்,  அறுபதோடிசைந்தபத்தால் - எழுபதினாலே,
குணித்த      -      பெருக்கப்பட்ட,     ஆயிரங்கள்     தாம் -
எழுபதினாயிரங்களாகும், எ-று.                             (27)

 28. அஞ்சுநூற் றிரட்டி வாயி லேழுநூ றாகும் பூழை
    துஞ்சிலாப் பலிபெய் பீட மாயிரஞ் சதுக்க மன்ன