உரைசெய்தாள் சூதி
லென்னோ டொப்பவ ரில்லை யென்றே
அரசன்மந் திரியை நோக்க வகோபெரி தழகி தென்றான்.
(இ-ள்.)
(அதன்மேல் இராமதத்தை)
அரசனது -
இராஜாவினுடைய, அருளினாலே - தயவினால், மந்திரியவனை
-
மந்திரியாகியவனை அந்த ஸ்ரீபூதியை, கூவி - அழைத்து,
பெரிது
போது - நெடுநேரம், அசதியாடி - பரிஹாசவசனங்கள்
பேசி
அவனுடன் விளையாடி, பின்னை -
பிற்பாடு, ஒன்றை -
ஒருகாரியத்தை, தொடங்கா -
தொடங்கி, சூதில் -
சொக்கட்டானாடுவதில், என்னோடு ஒப்பவர்
- எனக்குச்
சமானமானவர்கள், இல்லை என்று - இவ்வுலகத்திலில்லை என்று,
உரை செய்தாள் - சொன்னாள், அரசன் - அதைக்கேட்டு அரசன்,
மந்திரியை - அமைச்சனாகிய ஸ்ரீபூதியை, நோக்க - பார்க்க, (அவன்)
அகோ - ஆஹா, பெரிது - மிகவும், இது - இச்சொல்,
அழகு -
அழகாயிருக்கின்றது, என்றான் - என்று இகழ்ச்சிக்குறியாகச்
சொன்னான், எ-று.
(58)
282. வரையெனச் செறிந்த மார்ப மந்திரி தன்னை வல்லே
உரையொன்று முடியு மெல்லையுடைப்பனிப் போரி லென்னத்
திரைசெறி கடலந் தானை வேந்தயான் றேவி தன்னைப்
பொரவென்று பூட்டும் போழ்தே வெல்வனிப் போரி லென்றான்.
(இ-ள்.)
(அதைக்கேட்டு இராமதத்தை) வரைஎன
-
பர்வதம்போல, செறிந்த - சேர்ந்த, மார்ப - மார்பையுடைய அரசனே!,
மந்திரி தன்னை - மந்திரியை, வல்லே - சீக்கிரமாக, உரையொன்று -
ஒருவார்த்தையானது, முடியுமெல்லை - பேசிமுடிவதற்குள், இப்போரில்
- இச்சொக்கட்டான் போரில், உடைப்பன் -
தோல்வியடையச்
செய்வேன், என்ன - என்று சொல்ல, (மந்திரி) திரைசெறி - அலைகள்
நெருங்கிய, கடலந்தானை -
சமுத்திரம்போன்ற பெரிதாகிய
சேனையையுடைய, வேந்த - அரசனே!, யான் - நான், தேவிதன்னை
- இத்தேவியை, பொரவென்று - பொருதவென்று ஆரம்பித்து, பூட்டும்
போழ்தே - காய்களைப் பூட்டும் காலத்திலேயே, இப்போரில்
-
இந்தச்சூதாட்டப் போரில், வெல்வன் - ஜெயிப்பேன்,
என்றான் -
என்று சொன்னான், எ-று. (59)
283. முறைமுறை சபதம் செய்ய வரசனும் முகிழ் முகிழ்த்துப்
பிறைநுதற் பேதை தன்பா லிருந்தனன் றேவி பின்னை
மறையவன் மார்பி னூலு நாமமோ திரமு மீறா
முறைமுறை வென்றுகொண்டாள் மூர்ச்சியா வெய்து யிர்த்தான்.
(இ-ள்.) (இவ்வாறு)
முறைமுறை - ஒவ்வொரு முறையிலும்
திரும்பத்திரும்ப, சபதம் செய்ய - வாக்குறுதி செய்ய, அரசனும்
-
இராஜாவும், முகிழ் முகிழ்த்து - பிரமித்து, பிறைநுதல் - பிறைபோன்ற
நெற்றியையுடைய, பேதை |