பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 135


 

     (இ-ள்.)  மந்தித்த  -  மந்தமாகிய   (அதாவது  நிதானமாகிய),
நோக்கத்தால்      -      பார்வையினால்,     இம்மண்ணெலாம் -
இப்பூமியிலுள்ளவர்களை  எல்லாம், வணக்க - வசப்படுத்த,  வல்லாள்
- வல்லமையையுடைய இவள்,  சிந்தித்து - மனதில் தியானித்து, ஒன்று
- தக்க    ஒன்றை,     உரைத்து    -    சொல்லி,    செய்யின் -
செய்வாளேயானால்,  தேவரும்  -  தேவர்களும், பிழைக்கமாட்டார் -
இவளுடைய   சூழ்ச்சியினின்றுந்    தவறமாட்டார்கள்,  (ஆதலினால்)
வந்திக்காரார்க்கு    மூத்தான்    -    உலகத்தவரால்   புகழத்தகாத
வஞ்சனைக்காரர்களுக்கெல்லா  மேலானவனாகிய மந்திரியால், வைத்த
- வைக்கப்பட்ட,    செப்பதனை  -  இரத்தினச்  செப்பை,  வாங்கித்
தந்திட்டாள்  -  மேற்கூறியபடி வாங்கிக்கொண்டு  வந்து இராமதத்தை
யிடம் கொடுத்துவிட்டாள், தாமரைக்  கிழத்தியன்னாள் - செந்தாமரை
மலருக்குரியவளான   லக்ஷ்மி  தேவிக்குச்   சமானமாகிய இராமதத்தா
தேவியானவள்,   முகத்தை   -  செவிலித்தாயினுடைய  முகக்குறியை,
நோக்கா - பார்த்து, எ-று.                                 (69)

 293. முடிந்ததிக் கரும மென்னா முறுவலித் தவளோ டும்போய்ப்
     படங்கிடந் தல்குற் பாவாய் பட்டது பகர்க வென்ன
     நுடங்குநுண் ணிடையி னாய்நீ நுவலிய நினைத்துப் போகி
     மடங்கல்போ லிருந்த விந்த மந்திரி மாடம் புக்கேன்.

     (இ-ள்.)   இக்கருமம்   -   இந்தக்  காரியமானது, முடிந்தது -
முடிந்துவிட்டது,      என்னா     -     என்று,     முறுவலித்து -
புன்சிரிப்புக்கொண்டு,  அவளோடும் - அச்செவிலித்தாயுடன், போய் -
தனியாகப்போய்   (அவளைநோக்கி),  படங்கிடந்த  -  சர்ப்பத்தினது
படத்தின்  உருவமைந்த,  அல்குல்  -  அல்குலையுடைய,  பாவாய் -
சித்திரப்   பாவைபோன்ற    செவிலித்தாயே!,   பட்டது   -  நடந்த
விருத்தாந்தத்தை,   பகர்கவென்ன   -   சொல்லக்கடவாயென்று கூற,
(அவள்  இராமதத்தையை  நோக்கி) நுடங்கு - அசையாநின்ற, நுண் -
மெல்லிதாகிய, இடையினாய்  -  இடையை  உடைய இராமதத்தையே!,
நீநுவலிய   -   உன்னால்    சொல்லப்பட்டவைகளை,  நினைத்து -
மனதிலே      ஆலோசித்துக்கொண்டு,     போகி    -    சென்று,
மடங்கல்போலிருந்த  -   சிம்மத்தைப்போ  லிராநின்ற, இந்தமந்திரி -
இம்மந்திரியினது,  மாடம் - உப்பரிகையை, புக்கேன் - அடைந்தேன்,
எ-று.

     கிடந்தல்குல் என்பதில் அகரந்தொக்கது.                (70)

 294. புக்கபின் பாண்ட காரி புலியொப்பான் மெலியும் வண்ண
     மொக்கநீ யுரைத்த வெல்லா முரைத்தடை யாளஞ் சொல்லி
     மிக்கவன் வெகுளி மார்பி னூலுமோ திரமுங் காட்டித்
     தக்கதொன் றுரைத்த பின்னைத் தந்தசெப் பிதுவென் றிட்டாள்.

     (இ-ள்.)  புக்கபின் - அவ்வாறு  அடைந்தபிறகு, பாண்டகாரி -
பாண்டகாரியான,    புலியொப்பான்   -  புலிக்குச்  சமானமாகியவன்,
மெலியும் வண்ணம் -