136மேருமந்தர புராணம்  


 

தளர்ச்சி   யடையும்படி,  ஒக்க  -  பொருந்த,  நீயுரைத்தவெல்லாம் -
உன்னால்  சொல்லப்பட்டவைகளை  எல்லாம்,  உரைத்து  - சொல்லி,
அடையாளஞ்சொல்லி  - அடையாளத்தையுங்கூறி, வெகுளிமிக்கவன் -
கோபமிகுந்த   மந்திரியினுடைய,  மார்பினூலும்   -   மார்பிலணியும்
பூணூலையும்,  மோதிரமும்  -  முத்திரை  மோதிரத்தையும், காட்டி -
காண்பித்து,  தக்கதொன்று - தகுதியானதொரு  காரியத்தை,  உரைத்த
பின்னை - சொன்ன பிறகு, தந்த - அவனால் கொடுக்கப்பட்ட, செப்பு
- செப்பானது,  இது - இதுவாகும், என்று - என்று சொல்லி, இட்டாள்
- அச்செப்பை எதிரில் வைத்தாள், எ-று.                      (71)

 295. கறந்த பாலு முலைபுகுநீ கருதி னென்று பெரியவர்க
     ணிறைந்த மதிபோன் முகத்தாயை நிபுண மதியென் றுரைத்தார்க
     வறிந்தோர் சொல்லும் பொய்யாமோ வறிய காலன் பாலுயிர்போ
     லிறந்த பொருளைக் கொடுவந்தாய்க் கென்னான் செய்வ தென
                                       வுரைத்தாள்.

     (இ-ள்.) (அவ்வாறு வைத்தபின்பு) கறந்த - கறக்கப்பட்ட, பாலும்
- பாலும்,  நீ - நீ,  கருதின்  -  கருதுவையேயானால்,  முலைபுகும் -
மறுபடியும்  கொங்கையிலடையும்,  என்று - என்றுகூறி, (அதற்குத்தக)
பெரியவர்கள் - பெரியோர்கள், நிறைந்த - நிறைவுபெற்ற, மதிபோல் -
சந்திரன்போல், முகத்தாயை - முகத்தையுடைய  உன்னை,  நிபுணமதி
என்று  -  நிபுணமாமதி  என்று,  உரைத்தார்கள்  -  சொன்னார்கள்,
அறிந்தோர்  -  ஞானத்தை உணர்ந்த  பெரியோர்களது,  சொல்லும் -
வசனமும்,  பொய்யாமோ   -   பொய்யாகுமோ  (ஆகாது),  வறிய -
வறுமையையுடைய   (அதாவது     எவ்வளவானாலும்     நிரம்பாத
தொழிலையுடைய),  காலன்பால்   -   அந்தியகாலனிடத்தே  சிக்கிய,
உயிர்போல்       -      உயிரைப்போல,       இறந்தபொருளை -
நீங்கிவிட்டபொருளை, கொடுவந்தாய்க்கு -  மறுபடியும் கொண்டுவந்த
உனக்கு,  நான் செய்வது  -  நான்  செய்யத்தக்கது,  என்  - என்ன
இருக்கின்றது,  என  -  என்று,  உரைத்தாள்   -  இராமதத்தாதேவி
சொல்லினாள், எ-று.                                      (72)

 296. மந்தா ரத்தை வந்தணையும் வல்லி போல மன்னவனைச்
     சந்தார் முலையாள் வந்தணுகித் தன்கைச் செப்புக் காட்டுதலுங்
     கந்தார் களிற்று வேந்தன்றன் கையை மறியாக் காரிகையைச்
     சிந்தா மணியோ நீயென்றான் சிறைவண் டெழுந்த முடியானே.

     (இ-ள்.)  மந்தாரத்தை  -  கற்பக விருக்ஷத்தை, வந்தணையும் -
வந்து   சேருகின்ற,  வல்லிபோல்   -   காமர்வல்லிக்  கொடிபோல,
மன்னவனை   -   அரசனை,  சந்தார்  -  அழகார்ந்த, முலையாள் -
ஸ்தனங்களையுடைய இராமதத்தை, வந்தணுகி - வந்து