பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 137


 

சேர்ந்து,  தன்கைச்செப்பு - தன்கைவசமாகக் கொண்டுவந்த இரத்தினச்
செப்பை,  காட்டுதலும்  -   (அவனிடம்)   காண்பித்தலும்,  கந்தார் -
கல்ஸ்தம்பத்தில்  பிணிக்கப்பட்டுச்  சேர்ந்திருக்கும்படியான, களிற்று -
யானைக்குத்   தலைவனாகிய,   வேந்தன் - அரசன்,   தன்கையை -
தனதுகையை,  மறியா -  (அப்படியா வென்பதற்கடையாளமாக எதிரே
திருப்பி)  அசைத்து, காரிகையை - இராமதத்தையை (பார்த்து), சிறை -
இறகுகளையுடைய,    வண்டு   -   வண்டுகள்,  எழுந்த  -  புஷ்ப
மாலையினின்று மெழும்படியான, முடியான் - முடியையுடைய அரசன்,
நீ   -   தேவியேநீ,   சிந்தாமணியோ   -    (சிந்திதார்த்தங்களைக்
கொடுக்கும்படியான)  சிந்தாரத்தினமோ,  என்றான் - என்று  சொல்லி
ஆச்சரியமடைந்தான், எ-று.                                (73)

வேறு.

 297. மன்னவன் செப்பைக் காணா மற்றிவ னமைச்ச னாக
     முன்னமென் னரசு சென்ற படியிதோ வென்று நக்காங்
     கன்னமென் னடையி னாளை மந்திரித் தாக வென்னாச்
     சொன்னவவ் வணிகன் றன்னைச் சோதித்தற் குள்ளம் வைத்தான்

    (இ-ள்.)  மன்னவன்  -  அரசன், செப்பை - இரத்தினச்செப்பை,
காணா - பார்த்து, மற்று - பின்னை,  இவன் - இந்த ஸ்ரீபூதியானவன்,
அமைச்சனாக  -  மந்திரியாக,  முன்னம் - இதற்குமுன்,  என்அரசு -
எனது   ராஜ்ஜியம்,   சென்றபடி   -   நடந்தவிதம், இதோவென்று -
இத்தன்மைத்தோவென்று,  நக்கு  -  சிரித்து, ஆங்கு - அவ்விடத்தில்,
ஆக    -    நல்லதாகட்டும்,    என்னா   -   என்று,  அன்னம் -
அம்சபக்ஷிபோன்ற,    மெல்   -   மிருதுவாகிய,   நடையினாளை -
நடையையுடைய இராமதத்தா தேவியோடு,  மந்திரித்து - ஆலோசித்து,
சொன்ன    -    (மந்திரி   எனது   இரத்தினச்  செப்பை  மோசஞ்
செய்தானென்று)      சொல்லிய,      அவ்வணிகன்     றன்னை -
அவ்வர்த்தகனை,  சோதித்தற்கு - பரீக்ஷிப்பதற்கு, உள்ளம் வைத்தான்
- (அவ்வெண்ணத்தை) மனதில் கொண்டான், எ-று.            (74)

 298. மணிச்செப்பு நல்ல வல்லே தருகென வந்த வற்றிற்
     குணிப்பற்ற மணியை வாங்கி வணிகன்றன் மணியிற் கூட்டிப்
     பணித்தனன் வணிகன் றன்னை யழைக்கெனப் பணிந்து நின்றா
     னிணைத்தநா வளைத்துச் சீறும் பன்னகர்க் கிறைவ வென்றான்.

    (இ-ள்.)    (அவ்வாறு   கருதிய   அரசன்)   மணிச்  செப்பு -
இரத்தினச்செப்பு,    நல்ல    -    நன்மையானவைகளை,  வல்லே -
சீக்கிரத்தில்,     தருகென   -    கொண்டு   வருவீராக   வென்று,
(பண்டாகாரிகளுக்கு  ஆஜ்ஞைசெய்ய),  வந்தவற்றில்  - அப்பிரகாரம்
அவர்களால்   கொண்டுவரப்பட்ட  அவைகளினின்றும், குணிப்பற்ற -
மதித்தற்கரிய,   மணியை   -  இரத்தினங்களை,  வாங்கி  - எடுத்து,
வணிகன்றன் - பத்திர