138மேருமந்தர புராணம்  


 

மித்திரனுடைய,     மணியில்    -    இரத்தினங்களில்,    கூட்டி -
ஒன்றாகச்சேர்த்து,    (அவ்வணிகனுடைய   இரத்தினச்   செப்பையும்,
தன்னுடைய     செப்புக்களையும்     கலந்து    வைத்துக்கொண்டு),
வணிகன்றன்னை      -     அவ்வணிகனை,       அழைக்கென -
வரவழைக்கவென்று,   பணித்தனன்   -    (பணியாளர்க்கு) உத்தரவு
செய்தான்,  (அப்படியே  அவர்கள்  போயழைக்க  அவன்   வந்து),
பணிந்துநின்றான் - அரசனை வணங்கி எதிரில் நின்றான், இணைத்தநா
- இரண்டாகிய   நாக்களை,   வளைத்து   -   வளைத்து,   சீறும் -
கோபிக்கின்ற,   பன்னகர்க்கு,   நாகர்களுக்கு   (அதாவது    பவண
தேவர்களுக்கு),  இறைவ - அதிபதியாகிய தரணேந்திரனே,  என்றான்
- (கவனிப்பாயாக)   என்று   ஆதித்தியாப   தேவன்   சொன்னான்,
எ-று.                                                  (75)

 299. கச்சட்ட முலையி னாளும் வேந்தனும் வணிக கண்ட
     விச்செப்பி லுன்செப் புண்டே லியம்புநீ யென்ன லோடு
     மெய்ச்செப்பு மொழியி னானும் வேந்தனை வணங்கிப் பாரா
     விச்செப்பென் மணிச்செப்பென்றானெரிமணிக்கடகக் கையான்.

    (இ-ள்.) (அவ்வாறு சொல்லி மேலும் சொல்லத்தொடங்கினவனாய்)
கச்சு  -  இரவிக்கையை,  அட்ட  - மீறிஇராநின்ற, முலையினாளும் -
ஸ்தனங்களையுடைய   இராமதத்தையும்,   வேந்தனும்  -  சிம்மஸேன
வரசனும், (அதன் மேல் அவ்வணிகனை நோக்கி)வணிக - வணிகனே!,
கண்ட    -   இவ்விடத்தில்  நீபார்த்த,   இச்செப்பில்   -   இந்தச்
செப்புக்கூட்டங்களில்,  உன் -  உனது,  செப்பு  - இரத்தினச் செப்பு,
உண்டேல்   -   இருந்தால்,  நீ  இயம்பு  -  நீ  அதைச்  சொல்லு,
என்னலோடும் - என்று ஆஜ்ஞாபித்தவளவில், எரி - பிரகாசியாநின்ற,
மணி     -     இரத்தினங்களைப்    பதித்துச்செய்த,     கடகம் -
கங்கணத்தையணிந்த, கையான்  -  கைகளையுடையவனாகிய, மெய் -
உண்மையையே,  செப்பும்   -   சொல்லுகின்ற,   மொழியினானும் -
வசனத்தையுடைய   பத்திரமித்திரனும்,   வேந்தனை   -   அரசனை,
வணங்கி  -  நமஸ்கரித்து,  பாரா  -  நன்றாகப்பார்த்து,  இச்செப்பு -
இந்தச்செப்பு,  என்  - என்னுடைய,  மணிச்செப்பு - இரத்தினச்செப்பு,
என்றான் - என்று தன்னுடைய செப்பைக்கண்டுசொன்னான், எ-று.

 300. உரைத்தவன் றன்னைப் பாரா மன்னன்முன் னிவனையோரும்
     பிரத்தய மின்றி நின்றார் பித்தெனப் பித்த னென்னா
     வுரைத்தவென் னரசு சென்ற நிலத்தவ ருற்ற துன்பம்
     மரக்கலத் தவர்க்கு நாய்கன் வாரியின் மடிந்த தென்றான்.

    (இ-ள்.)  உரைத்தவன்   றன்னை  -  அவ்விதமாகச்  சொல்லிய
பத்திரமித்திரனை, பாரா  -  பார்த்து,  மன்னன்  -  அரசன்,  முன் -
இதற்கு முன், இவனை - இவ்வணிகனை,  ஒரும் - அறியும், பிரத்தயம்
-    ப்ரத்தியமம்,     (அதாவது      நல்லறிவு),  ...........  நின்றார் -
நிலைபெற்றிருந்தவர்கள், பித்தென - இவன்