பைத்தியக்காரனென்று சொல்ல, பித்தனென்னா
- பைத்தியக்காரனே
என்று, உரைத்த - சொல்லிய, என் - எனது, அரசு . இராஜ்யாதிகாரம்,
சென்ற - நடந்த, நிலத்தவர் - பூமியிலுள்ளவர்கள், உற்ற - அடைந்த,
துன்பம் - துக்கமானது, மரக்கலத்தவர்க்கு - கப்பலிலுள்ளவர்களுக்கு,
நாயகன் - எஜமானானவன், வாரியின் - சமுத்திர ஜலத்திலே, மடிந்தது
- விழுந்து மடிந்ததற்குச் சமானமாகும், என்றான் - என்று சொன்னான்,
எ-று. (77)
301. பத்திர மித்தி ராவுன் சித்திர மணிச்செப் பிட்ட
முத்திரை யுன்ன தாகில் வைத்திடல் கொண்டு போக
வத்திர முற்றி யானை மத்தக மறுக்கு மன்னா
முத்திரை யென்ன தன்று வித்தக ரிட்ட தென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லி
வணிகனை நோக்கி) பத்திரமித்திரா
- பத்திரமித்திரனே!, உன் - உனது, சித்திரம்
- விசித்திரமாகிய,
மணிச்செப்பு - இரத்தினச்செப்பில், இட்ட - வைக்கப்பட்ட, முத்திரை
- அடையாள முத்திரையானது,
உன்னதாகில் -
உன்னுடையதாயிருந்தால், வைத்திடல் - அதனை
இங்கே
வைத்திடாதே, கொண்டுபோக - கொண்டுபோகக்கடவாய், (என்று
அரசன் சொல்ல) அத்திரம் - அம்புகளை, உற்று - கையிற் பொருந்தி,
யானை - யானைகளின், மத்தகம் - மஸ்தகங்களை, அறுக்கும்
-
பிளக்கின்ற, மன்னா - அரசனே!, முத்திரை -
முத்திரையானது,
என்னதன்று - என்னதல்ல (அதாவது நான் வைத்த அடையாளமல்ல),
வித்தகர் - யாரோசாமர்த்தியர்களால், இட்டது - இடப்பட்டிருக்கின்றது,
என்றான் - என்று வணிகன் சொன்னான், எ-று.
‘என்று அரசன்
சொல்ல" என்பது இசையெச்சமாக
வருவித்துரைக்கப்பட்டது. (78)
302. திறவெனத் திறந்து பார்த்திட்
டிறைவமற் றென்ன வல்லா
வறிவரு விலைய கற்கண்
ணிறையவுங் கிடந்த வென்றான்.
(இ-ள்.) (அதைக்கேட்டு
அரசன்) திறவென - அச்செப்பைத்
திறக்கக் கடவாயென்று சொல்ல, திறந்துபார்த்திட்டு
- திறந்து
பார்த்துவிட்டு, இறைவ - அரசனே!, என்ன வல்லா - என்னுடைய
வல்லாதனவாகிய, அறிவரும் - அளவிட்டறிதற்கரிய,
விலைய -
விலையையுடையனவாகிய, கற்கள் - இரத்தினங்கள், நிறையவும்
-
செப்புநிறைய, கிடந்த - இராநின்றன, என்றான் - என்று
வணிகன்
சொன்னான், எ-று.
மற்று - அசை. (79)
|