303. மண்ணின் மிக்கவிம் மணியைநின் மணியொடு
கலக்கும்
மண்ணை தானுள னோவறி யாதுநீ யுரைத்தாய்
எண்ணி லாவிலை யிம்மணித் தன்மையைப் பார்க்ககுங்
கண்ணு மோடின காணெனக் காவல னுரைத்தான்.
(இ-ள்.) மண்ணில்
- இப்பூமியில், மிக்க - மிகுதியான
குணமுள்ள, இம்மணியை - இந்த இரத்தினங்களை, நின்மணியொடு
- உனது இரத்தினங்களோடு, கலக்கும் -
சேர்க்கும்படியான,
மண்ணைதான் - அறிவில்லாதவன், உளனோ - உண்டோ, (இல்லை),
அறியாது - தெரியாமல், நீயுரைத்தாய் - நீ சொல்லினாய், எண்ணிலா
- கணக்கில்லாத, விலை - விலைமதிப்பையுடைய, இம்மணி - இந்த
இரத்தினங்களினது, தன்மையை - குணத்தை, பார்க்கும் - பார்க்கின்ற,
கண்ணும் - உன்னுடைய கண்களும்,
ஓடின - பிரமித்துக்
குறிப்புத்தவறிப்போயின, காண் - இப்போது பயமில்லாமல் நன்றாக
நிதானித்துப் பார்க்கக்கடவாய், என - என்று, காவலன் - அரசன்,
உரைத்தான் - சொன்னான், எ-று. (80)
304. மத்த னல்லவன் கருமத்தின் வரும்பயன் றெரிந்து
சித்தம் வைத்தலாற் செய்வதோர் தொழில்வையத் தில்லை
வைத்த வென்மணி மறந்துவை கலுமழைத் தேனேற்
பித்த னென்றெனை யழைத்தவர் பிழைத்ததென் பெரியோய்.
(இ-ள்.) (அதைக்கேட்டு
வணிகன்) பெரியோய் - மேலான
அரசனே!, மத்தனல்லவன் - பைத்தியமில்லாத நன் ஞானமுடையவன்,
கருமத்தின் - காரியங்களினால், வரும் - வருகின்ற, பயன் தெரிந்து -
பலனைத் தெரிந்து, சித்தம் - மனதை, வைத்தலால்
- வைத்து
ஆராய்ந்து பார்த்தல்லாமல், செய்வது - செய்யும்படியான, ஓர் தொரி
- ஒரு காரியம், வையத்து - இவ்வுலகில், இல்லை - இல்லையாம்,
(ஆதலின்), வைத்த - வைக்கப்பட்ட, என்மணி
- எனது
இரத்தினங்களை, மறந்து - மறந்துபோய், வைகலும் -
நாடோறும்,
ழைத்தேனேல் - நான்
கூவினால், பித்தனென்று -
பைத்தியக்காரனென்று, என்னை - என்றனை,
அழைத்தவர் -
சொன்னவர்கள், பிழைத்தது - செய்த தப்பிதமானது, என் - என்ன
இருக்கின்றது (இல்லை; அப்படியானால் நான் பித்தனேயாவன் என்று
கூறினான்), எ-று.
(81)
வேறு.
305. இப்பரி சுரைத்துச் செப்பி லிட்டமா மணியை யெல்லாம்
செப்பரும் பரிசு நீக்கிச் செழுமணி கையிற் கொண்டான்
|