பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 141


 

     மெய்ப்பரி சறிந்து தன்மை கைக்கொண்டு பிறிது விட்ட
     வப்பிர மத்த னாய முனியைப்போல் வணிக னின்றான்.

     (இ-ள்.)   இப்பரிசு  -  இப்பிரகாரமாக,  உரைத்து  - சொல்லி,
செப்பில்   -   இரத்தினச்  செப்பில்,  இட்ட  - வைக்கப்பட்ட, மா -
பெருமை பொருந்திய, மணியை எல்லாம் - இரத்தினங்களை எல்லாம்,
செப்பரும் -  சொல்லுதற்கரிய,  பரிசு - விதாயமாக,  நீக்கி - விலக்கி,
செழும்  - செழுமைபெற்ற, மணி - தனது இரத்தினங்களை, கையில் -
தன்கையில்,  கொண்டான்  -   எடுத்துக்   கொண்டான், (அதனால்),
மெய்ப்பரிசு - உண்மைத்  தத்துவத்தை, அறிந்து - தெரிந்து, தன்மை -
தனது ஸ்வரூபத்தை, கைக்கொண்டு - உபாதேயமாகஸ்வீகரித்து, பிறிது
- அன்னிய    ஸ்வரூபத்தை,   விட்ட   -   அஹயமாக    நீக்கிய,
அப்பிரமத்தனாய   -   அப்பிரமத்தகுணமுடைய,  முனியைப்போல் -
முனிவரனைப்போல்,  வணிகன்  -  அவ்வணிகனான பத்திரமித்திரன்,
நின்றான் - நின்றான், எ-று.                                (82)

 306. மணியிவை சிறிது பூதி வைத்தன வாகு முன்னைக்
     குணியிலான் செய்த குற்றந் தீரநீ கொண்டி டென்ன
     வணியிலா மகளிர் போலப் பிறன்பொருள் கொண்டு வாழும்
     பணியிலே னரச வென்றான் பருமணி வயிரத் தோளான்.

     (இ-ள்.)   (அப்போது   அரசன்)   மணி    இவை  -   இந்த
இரத்தினங்கள்,  சிறிது - கொஞ்சம், பூதி - ஸ்ரீபூதியினாலே, வைத்தன
வாகும் - வைக்கப்பட்டனவாகும்,  உன்னை - உன்றனை, குணியிலான்
- நற்குணனாயில்லாத அவன்,  செய்த - இவ்வாறு  செய்த, குற்றம் தீர
- குறையானது   நீங்கும்படி,   நீ  -  நீ,  கொண்டிடு - (இவற்றைக்)
கைக்கொள்வாயாக,   என்ன  -  என்று  அரசன்  சொல்ல,  பரும் -
பருத்த,   மணி  -  அழகிய,  வயிரத்தோளான்  -  வஜ்ஜிரம் போல்
கெட்டியாகிய புயத்தையுடைய  பத்திர மித்திரன்,  அரச - இராஜனே!,
அணியிலா   -   (நற்குணமில்லாத)   அழகில்லாத,   மகளிர்போல -
பொதுஸ்திரீகளைப்  போல,  பிறன்  -  அன்னியனுடைய, பொருள் -
பொருள்களை,  கொண்டு  -  கைக்கொண்டு,   வாழும் - வாழ்கின்ற,
பணியிலேன்  -  தொழிலில்லாதவன்   நான்,   என்றான்  -  என்று
சொன்னான், எ-று.                                       (83)

 307. மன்னிய சுத்த மில்லான் பொருளினை வலிதின் வாங்கி
     இந்நில வரைப்பி னென்றும் நின்றிடும் பழியு மெய்தி
     மின்னினுங் கடிது வீயும் யாக்கையுங் கிளையு மோம்பல்
     மன்னவ பெரிய தொன்றோ மக்களிப் பிறவிக் கென்றான்.

     (இ-ள்.) (அவ்வாறு சொல்லி  மேலும்) மன்னிய - நிலைபெற்றிரா
நின்ற,   சுத்தம்   -   மனோசுத்தம்,   இல்லான்  - இல்லாதவனாகி,
பொருளினை - பிறர் பொருள்