சேர்வின் மற்று முரைத்தனன்
சுந்தர
மோரி னன்மதி யத்தினை யோதுமே.
(இ-ள்.)
(வார் - ரவிக்கைகள், மலி - நிறைந்த, முலை -
ஸ்தனங்களையுடைய, மாதர் - தேவஸ்த்ரீகளுடைய,
நடங்களும் -
நர்த்தனங்களும், கார்மலி - மேக மண்டலத்தை அளாவி
உயர்ந்து
நிறைந்த, கதலிக்கொடி - த்வஜக்கொடிகளின், ஈட்டமும் -
திரள்களையும், சோர்வில் - தளர்வில்லாத, மற்றும் - இன்னும்
அந்த
ஸப்த பூமிகளிலுள்ள எல்லாவற்றையும், உரைத்தனன் -
இதுவரையிற்
சொன்னேன், ஓரின் - இனி அறியுமிடத்தில், சுந்தரம் -
அழகு
வாய்ந்த, நல் - நன்றாகிய, மதியத்தினை
- ஸமவஸரணத்தின்
மத்தியஸ்தானமாகிய லட்சுமீ வர மண்டபத்தின் ஸ்வரூபத்தை, ஓதும்
- சொல்லுவோம், எ-று. (80)
வேறு. 1128.
மகரவண் கொடியவன் றன்னை வென்றவன்
நகரமுந் தனதிட மாக நாட்டியொண்
புகரறு பொன்னெயி லாம்பொற் றாமரை
சிகரமாந் திருநிலை யமைதி செப்புவாம்.
(இ-ள்.) (அவ்வாறு
சொல்லத் தொடங்கி முதலில்), மகரவண்
கொடியவன்றன்னை - வளப்பம் பொருந்திய மகரக்
கொடியையுடைய
மன்மதனை, வென்றவன் - ஜெயித்தவனாகிய
ஜினேந்திரனுக்கு,
நகரமும் - தங்கும்படியான நகரமும், தனதிடமாக - இதனினிடமாக,
நாட்டி - தேவர்களால் செய்து, ஒண் - ஒளி பொருந்திய , புகரறு -
களங்கமற்ற, பொன்னெயிலாம் - பொன்னாலாகிய ஸமவஸரணமாகிற,
பொற்றாமரை - பொன்னாலாகிய அழகிய தாமரை
மலரினுடைய,
சிகரமாம் - சிகரமாகிய, திருநிலை - ஸ்ரீநிலயத்தின்,
அமைதி -
அமைப்பையும், செப்புவாம் - சொல்லுவோம், எ-று. (81) 1129. தேவர்கோன் றிசைதிசை கண்டு செப்பிய
மூவுல கரசர்க ளாதி மூதுறை
மேவிய விதனையான் விளம்ப லுற்றது
நாவலர் நகுவதோர் வாயி லாகுமே.
(இ-ள்.) தேவர்கோன் - தேவேந்திரன், திசை திசை -
திக்குகள்
திக்குகள்தோறும், கண்டு - பார்த்து,
செப்பிய - (இவ்விடத்தில்
இவ்விதமாகச் செய்யவேண்டுமென்று) சொல்லி நிருமிக்கப்பட்ட,
மூவுலகரசர்கள் - தேவதானவமான வேந்திரர்களுக்கு,
ஆதி -
முதல்வனாகிய ஆதிபத்தியத்தையுடைய ஜினேந்திரன்,
|