பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 143


 

விரோதம், இன்று - இப்பொழுது,  ஆய் - உண்டாகி, நின்றதல்லால் -
அனுபவத்தில்  நின்றதல்லாமல்,  மற்று  -  பின்பு,  இவன் செய்தது -
இம்மந்திரியால்  செய்யப்பட்டது,   உண்டோ  -  வேறொன்றுண்டோ,
(இல்லை; வினையின்படியே நடந்தது என்று சொன்னான்), எ-று.   (86)

 310. நீதிநூ லோது வான்போ னின்றவ னன்று சொன்ன
     தீதிலா மொழியைக் கேளா திண்டிறற் சீய சேனன்
     வேதவா ணிகனோ நீதி நூல்கண்ட வேந்த னோவிக்
     கோதிலாக் குணத்தி னானென் றுவந்தன னிருந்துசொன்னான்.

     (இ-ள்.)   நீதிநூல்  -   நீதி  சாஸ்திரத்தை,  ஒதுவான்போல் -
படிப்பவன்போல, நின்றவன் - நின்ற பத்திரமித்திரன், அன்று சொன்ன
- அப்பொழுது   சொன்ன,   தீதிலா  -  குற்றமில்லாத, மொழியை -
வசனத்தை,  கேளா - கேட்டு,  திண் - வலிமை பொருந்திய, திறல் -
பராக்கிரமத்தையுடைய,      சீயசேனன்   -   சிம்மஸேனமகாராஜன்,
(அவனைநோக்கி),          வேதவாணிகனோ       -       வேத
சாஸ்திரவர்த்தகஞ்செய்கின்றவனோ;      (அல்லது)       நீதிநூல் -
நீதிசாஸ்திரத்தை,  கண்ட - கரைகண்ட, வேந்தனோ - முதல்வனாகிய
அரசனோ,  இக்கோதிலா  -  இந்தக்குற்றமில்லாத,   குணத்தினான் -
நற்குணத்தையுடையவன்,  என்று  -  என்று  புகழ்ந்து, உவந்தனன் -
சந்தோஷித்தவனாய்,   இருந்து   -   தங்கி,  சொன்னான் - மேலும்
(கீழ்க்கண்டவாறு) சொன்னான், எ-று.                        (87)

 311. வையகம் பெறினும் பொய்யா வாக்கினன் மரணம் வந்தா
     லுய்யலா மருந்தென் றாலும் பிறன்பொருட் குள்ளம் வையான்
     தையலாய் தரும நீதி சமநிலை தயா வொழுக்கம்
     வையகந் தன்னி லிந்த வணிகனாய் வந்த வென்றான்.

     (இ-ள்.)  வையகம்   பெறினும்  -  இந்தப் பூமி  ராஜ்ஜியத்தை
அடைவதாயினும்,   பொய்யா  -  பொய்  சொல்லாத,  வாக்கினன் -
வசனத்தை   யுடையவன்,   மரணம்  வந்தால்  -  சாவுவந்த  போது,
உய்யலாம்   -  பிழைக்கும்படியான,  மருந்தென்றாலும்  -  அவுஷத
மென்றபோதிலும், பிறன்  பொருட்கு - அன்னியனுடைய பொருளுக்கு,
உள்ளம்   -  மனத்தில்  ஆசையை, வையான்  -  வைக்கமாட்டான்,
தையலாய்  -  இராமதத்தையே!, தருமநீதி - தருமநீதியும்,  சமநிலை -
சமதநிலைமையும்,  தயா  -  தயவும்,  ஒழுக்கம்  -  நன்னடக்கையும்,
வையகந்  தன்னில்  -  இந்த வுலகத்தில், இந்த  வணிகனாய் - இந்த
வணிகனாக ரூபமெடுத்து, வந்த  -  வந்தனவாகும், என்றான் - என்று
இராமத்தையை நோக்கிக் கூறினான், எ-று.                    (88)

 312. என்றலும் தேவி வென்ற வாதிதன் பக்கத் தார் போல்
     நின்றன ளுவகை நெஞ்சி னிறைந்தன ளாக நீதிக்